அனைவரும் சமம் என கூறிய தலைவரே எமது நாட்டுக்கு சிறந்தவர்! – சஜிதின் வெற்றியை நிச்சயித்துக் கூறுகின்றார் இஸ்மாயில் எம்.பி
நாங்கள் இன்று சஜிதை ஆதரக்க முனைந்திருப்பது அவரது முழு மூச்சான சமூக சிந்தனைக்காவே தான்! சஜித் பிரேதாசவுடன் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளோம். அந்த சந்தர்ப்பத்தில் சிறுபாண்மைக்கு நீங்கள் தரும் உத்தரவாதம் என்னவென்று வினவிய வேளையில் அவர் கூறிய முதல் வார்த்தை ‘இந்நாட்டில் சிறுபாண்மை, பெரும்பாண்மை என்ற எண்ணமே வேண்டாம். இலங்கையர் என்ற வகையில் அனைவரும் சமம்’ என்பதாகும். இதுதான் சஜித்திடமுள்ள உயரிய பண்பு. – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். புதிய ஜனநாய…
