Headlines

ad34@hFacMC

பொதுஜனபெரமுன ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நிம்மதி சீர் குலையும்_பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைக்குமாக இருந்தால் அது முஸ்லிம்களின் நிம்மதியை சீர்குலைத்து விடும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து கிண்ணியாவில் இன்று (10) இடம் பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் மக்களது பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒருவராகவும் முஸ்லிம் சமூகத்தின் மதக் கடமைகள் உரிமைகளை பாதுகாக்கக்…

Read More

முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ சஜித்தை ஆதரிப்பது எமது தார்மீக கடமை நிந்தவூரில்  அமைச்சர் றிசாட்!!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் சிறிபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்  இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் தலைமையில் சனிக்கிழமை (9) மாலை நிந்தவூரில்…

Read More

தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமையை நிலைப்படுத்த சஜித்தை வெல்லச் செய்வோம் கல்குடா கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழும் சூழலை உறுதிப்படுத்த முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித்தை ஆதரித்து ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றபிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ரோஹித்த போகொல்லாகம, மற்றும் முன்னாள்…

Read More

சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதியை உருவாக்க முடியாது என்பதை உணர்த்துவோம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்!

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும். என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.. முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உரையாற்றினார்.அவர்மேலும் கூறியதாவது, நாட்டின் எதிர்கால தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் இந்த தேர்தலில் நீங்கள்…

Read More

மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்!!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை (08) மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் அமைந்தது. ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து பேசினார்.சுமார் அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.சஜித் பிரேமதாசவுக்கு மன்னார் ஆயர்,ஆசி வழங்கினார். இதன் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ‘ஒன்றாய் முன்னோக்கி’ குருநாகலயில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ‘ஒன்றாய் முன்னோக்கி’ ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (07) முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட தலைவருமான எம். என்.நஸீர் தலைமையில் ஜாகம பிரதேசத்தில் இடம்பெற்றது.  

Read More

சஜித்தை வெல்லச் செய்வதன் மூலமே அடக்குமுறையை தகர்த்தெறியமுடியும். அக்கரைப் பற்றில் றிஷாட் !!!

சிறுபான்மைச் சமூகத்தினை அடக்கி, அதன் பொருளாதாரத்தினை ஒடுக்கி, நமது சமூகத்தின் குரலை நசுக்கி, எம்மை அடிமைப்படுத்துவதற்காக சில தீய சக்திகள் பாடுபட்டு வருகின்றன. இச்செயற்பாட்டினை முறியடித்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது சிறுபான்மைச் சமூகத்திற்கு விடிவு கிட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் காரியாலயம் திறந்துவைப்பு….

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஆதரித்து விளாவெட்டுவானில் காரியாலயம் திறப்பு விழா கஜேந்திரன் தலைமையில் (06.11.2019) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் , ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மூர்த்தியும் கலந்து கொண்டார்.

Read More

சமூகத்தின் சுய மரியாதையையும் கெளரவத்தினையும் பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் சம்மாந்துறையில் அமைச்சர் றிஷாட்

முஸ்லிம் இளைஞர்கள் நமது சமூகத்தினது சுய மரியாதையையும் கெளரவத்தினையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு இன்று புதன்கிழமை (06) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமர் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாசாவை ஏன் ஆதரிக்கின்றது என்றும்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் தலைமையில் இன்று (06) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கெளரவ அதிதிகளாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பிரதியமைச்சர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், அனோமா கமகே,…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச மகளிர் மாநாடு..

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்வெற்றிக்கான மகளிர் மாநாடு மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றது. குறித்த மகளிர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாநகர சபை முதல்வருமான ரோஸி சேனநாயக்க, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் பாரியார், மற்றும் கல்வி…

Read More

பிரிவினைவாத்தை விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் மீது, ஏப்ரல் சம்பவத்தின் பின் விமர்சனம் செய்தவர்கள்.இன்று அம்மக்களிடம் வாக்கு கேட்பது வேடிக்கையானது. அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

இலங்கையில் எந்தவொரு காலத்திலும் பிரிவினைவாத்தை விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் மீது,கடந்த ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தின் பின் கடுமையான சித்திரவதைகளை செய்தவர்கள்.இன்று இம்மக்களிடத்தில் வந்து வாக்கு கேட்பது வேடிக்கையானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன தெரிவித்தார். கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சஜித் ஆதரவு கூட்டம் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான முஹம்மத் பாயிஸ் தலைமையில் செவ்வாய்க்கிழ வெல்லம்பிட்டியில் இடம்…

Read More