Headlines

ad34@hFacMC

அரசியல் அதிகாரம் இல்லாத போதும் அம்பாறை மக்களுக்கு, மக்கள் காங்கிரஸ் பெரும் பணியாற்றியுள்ளது’ – வேட்பாளர் ஹனீபா மதனி!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளில் இரண்டை மீறிவிட்டார் எனவும், அதில் தேசிய பாதுகாப்பும் ஒன்று என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு  குறுகிய காலத்துக்குள் அதிகமான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்தவர். எனவே, சிறுபான்மை மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு…

Read More

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே சமூக நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி கிட்டும்’ – கட்சியுடன் இணைந்துகொண்ட மாற்றுக் கட்சி மாதர் சங்கங்கள் தெரிவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதின், கடந்த 22, 23 ஆம் திகதிகளில் அம்பாறைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கருதரங்கு மற்றும் வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுடனான விசேட சந்திப்புக்களிலும்  கலந்துகொண்டார். அதன் ஓர் அங்கமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (23) மாவடிப்பள்ளிக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வொன்றை, கட்சியின் மாவடிப்பள்ளி…

Read More

தன்னை நம்பிய சமூகத்திற்காக எதனையும் இழக்க துணிந்தவரே ஜவாத்…!

இன்றுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மிகவும் வேறுபட்டவர். அவரின் தோற்றம் சிங்கத்தை நேரடியாக பார்ப்பது போன்றிருக்கும். அவரின் பேச்சு சிங்கத்தின் கர்ஜனையாகவே இருக்கும். தோற்றத்திலும், பேச்சிலும் மாத்திரமல்ல வீரத்திலும் அப்படியே இருப்பார். இவரிடம் பல நல்ல பண்புகளுள்ளன. அதில் மிக முக்கியமானதே சுயநலம் பார்க்காது, நீதிக்காக எதனையும் இழக்க துணிவதுதான். மறைந்த தலைவர் அஷ்ரபோடு மிகவும் நெருங்கிப் பழகியவர்களில் இவரும் ஒருவர். அவரது மேடைப் பேச்சுக்கள் எப்போதும் மறைந்த தலைவரை விழித்ததாகவே இருக்கும்….

Read More

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும்” – பாலமுனையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

மாவட்டத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாத்திரமின்றி, தேசிய ரீதியில் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், சவால்களை முறியடிப்பதற்கும் மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை துணைபுரியுமென அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, பாலமுனையில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி கபூரை ஆதரித்து, மாவட்டக் குழுவின் தலைவர் சட்டத்தரணி அன்சிலின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “வரலாற்றில் இத்தனைகாலம் நமது சமூகம் எதிர்கொண்டிராத ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் இப்போது சந்திக்கின்றது. சொந்தக்காலில்…

Read More

“ஊர் ஒன்றுபடின் மருதமுனை மண்ணுக்கு விடிவு” – மருதமுனையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மருதமுனை மக்கள் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தைப் பெறமுடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் வை.கே.ரஹ்மானை ஆதரித்து, நேற்று மாலை (23) மருதமுனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுக்கையில், “மருதமுனை மக்கள் அயல் கிராமங்களில் உள்ள வேட்பாளர்களையே காலாகாலமாக…

Read More

புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு – ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அவகாசம் கோரல்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானதென்றும், தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே, இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதுவித சம்பந்தமும் இல்லாமல், தனது பெயரை பாவித்துள்ள புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும், தனது விளக்கத்தை…

Read More

‘புதுப்புது பீதிகளை கிளப்பி அரசியலில் எம்மை பணியவைக்க முயற்சி’ – நாவிதன்வெளியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

தினமும் புதிய புதிய பிரச்சினைகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி வருவதுடன், பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறான அடக்குதல்கள் மூலம் நாம் பணியமாட்டோம் என தெரிந்திருந்தும், புதிய புரளிகளைக் கிளப்பி, மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து, நாவிதன்வெளி மத்திய குழுத்தலைவர் மஹ்ரூப் தலைமையில், இன்று நண்பகல் (23) அம்பாரை, நாவிதன்வெளியில்…

Read More

‘முஸ்லிம்களை பயங்கரவாதத்துடன் முடிச்சுப்போட்டு அரசியல் பிழைப்பு நடத்தும் கையறுநிலை’ – கல்முனையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பயங்கரவாத நடவடிக்கையுடன் முஸ்லிம்களை வேண்டுமென்றே முடிச்சுப்போட்டு, தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதும் அதிகாரங்களை நிலைப்படுத்துவதுமே ஆளும் அரசியல்வாதிகள் சிலரின் திட்டமெனவும், பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் இந்த குரோத சக்திகளிடம் அறவே இருந்ததில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ஜவாத் அவர்களை ஆதரித்து, நேற்று மாலை (22) கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தொடர்ந்து பேசிய அவர், “நமது சமூகத்தினர்…

Read More

‘ஒன்றுபட்டு வாக்களித்து ஊரின் தலைமையை உறுதிப்படுத்துங்கள்’ – பொத்துவிலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை ஆதரித்து, பொத்துவிலில், இன்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “சமூக நலனுக்காகவும்…

Read More

“சமூகக் குரல்களாக ஒலிக்கக்கூடிய பிரதிநிதிகளை சிறுபான்மையினம் தேர்ந்தெடுப்பது காலத்தின் கட்டாயம்” – முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!  

சமூக அமைதியை குலைக்கக் கூடிய அரசியல் சக்திகளை தோற்கடிக்கும் வகையில், சிறுபான்மை மக்கள் தனது ஜனநாயக சக்தியான வாக்குப்பலத்தை பிரயோகிப்பதுடன், சமூகக் குரல்களாக ஒலிக்கக்கூடிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் உறுதியாக இருக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில், இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, “சிறுபான்மை மக்களை குழப்பத்துக்குள்ளாக்கி, பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளை அபரிமிதமாக பெறும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள், அரசியல் களத்தில்…

Read More

“நீதிமன்றில் தெரிவிக்க வேண்டியவைகளை ஊடகங்களில் மாத்திரம் பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பது ஏன்? “ – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை, அங்கு தெரிவிப்பதை விடுத்து, ஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று (20) பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட், எனது சகோதரருக்கு கடந்த வருடம் ஆறு உள்வரும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருக்கிறார். அந்த குற்றச்சாட்டின்…

Read More

“சிறுபான்மையினரின் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய, இன ஒற்றுமையை வலியுறுத்தக்கூடியவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப்!

சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கக்கூடிய, நில அளவை, காணி அபகரிப்பு போன்ற எமது உரிமைகளுக்காக போராடக்கூடிய ஒரு பிரதிநிதியை, இந்த மண்ணுக்கு தெரிவுசெய்ய வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார். தோப்பூர் – ஆஸாத் நகர் பகுதியில், நேற்று (20)மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இன ஒற்றுமையை வலியுறுத்தக்கூடியதும் தமிழ், முஸ்லிம்கள்…

Read More