Headlines

ad34@hFacMC

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதித்த நிறைவேற்று சபைக்கு எதிராக வழக்கு

இலங்­கையில் தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் எனவும் தமிழ் மொழி­யிலும் தேசிய கீதத்தைப் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளமை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது எனவும் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்பின் தேசிய அமைப்­பாளர் வெய­வர சீல­ரத்ன தேரர் இவ் அனு­ம­தியை வழங்­கிய தேசிய நிறை­வேற்­றுச்­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக புத்­தாண்டின் பின்பு வழக்குத் தொட­ர­வுள்­ள­தாக கூறினார். நேற்­றுக்­காலை தெஹி­வளை பெளத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிலே அவர் மேற்­கண்ட கருத்­தினை வெளி­யிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் உலகில்…

Read More

கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் நன்மை கருதி க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் புல்மோட்டை கனியவள கூட்டுதாபனத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி நாட்டுக்கும்,பிரதேசத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் செயலுருவம் வழங்கவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டைக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் நன்மை கருதி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்ததன் பின்னர் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை…

Read More

புல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் றிஷாத் பதியுதீன் ஆராய்வு

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட புல்மோட்டை கிராமத்திற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று விஜயம் செய்தார். புல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.புல்மோட்டை நுாலக கேட்போர் கூடத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். கி்ண்ணியா பிரதேச சபை தவிசாளரும்,திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளருமான ஹில்மி,குச்சவெளி பிரதேச சபை…

Read More

வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் சம்பிரதாயபூர்வமாக மன்னாரில் திறந்துவைக்கப்பட்டது

ஏ கே எம் சியாத் வடக்கில் வாழும் முஸ்லீம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள  வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழு (Northern Muslim Citizens Committee (NMCC) பிரதான காரியாலயம் ஏ எச் எம் முபாரக் மெளலவி தலைமையில் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது. இதில்  பிரதம அதிதியாக கலந்துகொண்ட மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்  வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயத்தை  சம்பிரதாயபூர்வமாகதிறந்து…

Read More

தாதியர் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த சம்மாந்துறை மாணவிகள்

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் 2011 ஏ தொகுதி இறுதிப் பரீட்சையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவிகள் சிறப்புச் சித்தியடைந்திருக்கின்றார்கள். இலங்கையின் முண்ணனி தாதியர் பயிற்சிக் கல்லுாரிகளில் ஒன்றான யாழ்ப்பாண தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் மூன்று வருட கால தாதிய பயிற்ச்சியினை வெற்றிகரமாக முடித்து இறுதிப் பரீட்சையிலேயே இவர்கள் சித்தியடைந்திருக்கின்றார்கள். இறுதிப் பரீட்சையில் சிறந்த சித்தியினை அடைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தரம் 3 தாதியர் நியமனங்களை பெற்று சம்மாந்துறைக்கும்,…

Read More

மூக்கின் மேல் அடையாளம் – வியக்க வைக்கும் அல்-குர்ஆன்!

‘அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்’ எனக் கூறுகிறான். ‘அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்’ -குர்ஆன் 68:15,16 நாளை மறுமையில் ஏக இறைவனை மறுத்தோரை அனைத்து மக்களின் முன்னாலும் தனியாக அடையாளப்படுத்த அவர்களின் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்கிறான் இறைவன். மனிதனுக்கு அடையாளமிட எத்தனையோ இடங்கள் இருக்க இறைவன் மூக்கை பிரதானமாக ஏன் சொல்ல வேண்டும்? மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் உள்ளன. ஒன்று ரேகைகள். இது பற்றி நமக்கும் தெரியும்….

Read More

நபிமருத்துவம் வெந்தயம்!

வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக…

Read More

இந்திய இணையதள பயனர்களுக்கு வரப்போகும் பெரிய ஆபத்து – Net Neutrality ? ஏன் ?? எதனால் ?

கண்டிப்பா முழுசா படிச்சிட்டு – முடிந்த அளவு பகிருங்கள் !!!  Net Neutrality – இணைய நடுநிலை Net Neutrality என்றால் அனைத்து இணையதளங்களும் நிலையான வேகம் நிலையான கட்டணம் என்று இணையத்தில் நடந்துகொள்ள ஒரு விதி.இது தான் பொருள் ….ஆனா உண்மை என்னன்னா. முதலில் இதன் பயன்கள் என்ன ??? என்று பார்ப்போம் …. இலவச இன்டர்நெட் !!! வாயை பிளக்காதீர் … உண்மை தான் உங்க போனில் பத்து காசு இல்லேன்னா கூட இலவசமா…

Read More

புனித போரில் முழு கவனம் செலுத்துவதர்காக தனது திருமணத்தையே நிறுத்திய சவூதி இராணுவ வீரர்!

நீங்கள் படத்தில் காணும் இராணுவ வீரர் சவுதி அரேபியாவை சார்ந்தவர் அவருக்கு திருமணத்திர்கு நாள் குறிக்க பட்டு திருமணத்திர்கான அழைப்புகளும் வழங்க பட்டு விட்ட நிலையில் தான் சவுதி அரசு ஆசிபத்துல் ஹஸ்மு என்ற போரை அறிவித்தது உடனடியாக அந்த வீரர் இது முக்கியத்துவம் வாயந்த போர் இந்து போரில் கலந்துகொண்டு அசத்திய வாதிகளை வீழ்த்துவதர்கு வாய்ப்பு கிடைத்தாலும் அல்லது அதில் கலந்து கொண்டு சத்தியத்தை நிலை நாட்டும் நோக்கில் வீர மரணம் அடைய நேரிட்டாலும் இரண்டுமே…

Read More

குவைத் வாழ் சகோதரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

பீர் மரையாக்கர், குவைத் (நெல்லை) குவைத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அவசர சட்டம் கொண்டு வர பட்டது அந்த சட்டத்தின் மூலம் புராஜெக்ட் விசாவில் வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தனாசில் பெற்று வெளியே வேலை பார்க்க தடை போடப்பட்டது விசா காலம் முடிந்து விட்டால் நேரடியாக ஊருக்கு தான் செல்ல வேண்டும் என்ற ஒரு பரிதாப நிலை இருந்தது மகிழ்ச்சியான தகவல் *********************** தற்சமயம் குவைத் அரசு வெளி நாட்டவரின் கஷ்ட நிலை…

Read More

19ஆவது சட்டத்திருத்தம்: உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

இலங்கை அரசியல் சாசனத்தின் 19ஆவது சட்டத் திருத்தத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவது, தேர்தல் நடைமுறையில் மாறுதல் கொண்டுவருவது உட்பட பல விஷயங்களை உள்ளடக்கிய அரசியல் சாசனத்தின் 19ஆவது திருத்ததை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. . அமைச்சரவையின் தலைவராக பிரதமர் செயல்படுவது, அமைச்சர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்குவது போன்ற சில அம்சங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதலுக்கு…

Read More

அஸ்கிரிய பீடாதிபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி கௌரவம்

காலம்சென்ற அஸ்கிரிய பீடாதிபதி சங்கைக்குரிய ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (09) இறுதி மரியாதை செலுத்தினார். தேரரின் பூதவுடன் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி இறுதி கௌரவம் செலுத்தியதுடன்  விகாரையிலுள்ள ஏனைய பிக்குமாருக்கும் மாணவ பிக்குகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

Read More