“அங்கவீனம் ஓர் இயலாமை அல்ல” என்பதை திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நிதர்சனமாக உணர்த்திய மாணவர்கள்!
திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனிடம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளையும், தேவைகளையும் சைகை மொழியின் மூலமும், எழுத்து மூலமும் வெளிப்படுத்தினர். 1984 ஆம் ஆண்டு ஐந்து பிள்ளைகளுடன் ஒரு வாடகை வீட்டில், தனி மனிதன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையத்தின் முன்னோடியும், ஸ்தாபகத் தலைவருமான ஜிப்ரி ஹனீபா, அண்மையில் காலமான போதும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு…
