‘வடக்கு, கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தளவில் பூர்த்தி செய்வோம்” பிரதியமைச்சர் அமீர் அலி!
-முர்ஷித் கல்குடா- வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில், திட்டமிட்டு செயற்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிரதியமைச்சர் அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும், விருந்துபசாரமும் பொத்தானை, கழுவாமடுவில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எனக்கு மேலதிகமாக மீன்பிடி…
