Headlines

ad34@hFacMC

நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் 19!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான கணிப்பீடுகளையே முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, பெரும்பான்மை தேசிய கட்சிகளில் தற்போதுள்ளதைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதுடன், எம்.பிக்களைப் பெறக் கூடிய வேறு கட்சிகளுடன் அரசியல் செய்வது குறித்தும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திப்பதே 19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை பொருத்தமானது. காலமாற்றத்துக்குள்…

Read More

அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்!

(அகில இலங்கை மக்கள் கான்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் 46வது பிறந்ததினத்தையொட்டி வெளியிடப்பட்டும் கட்டுரை 27.11.2018) இலங்கையில் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் நெருக்கடி காரணமாக நாடும் அரச இயந்திரங்களும் முடங்கிக் கிடக்கின்றது. பிரதமர் பதவி நீக்கத்தில் ஆரம்பித்து பாராளுமன்ற ஒத்திவைப்பு, திடீரெனக் கலைப்பு மற்றும் நீதிமன்றம் வரை சென்றுள்ள விவகாரங்களால் இலங்கை அரசியலில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் இதன் தாக்கம் விரவி, அன்றாட நிர்வாகம் சீர்குலைந்து, பொருளாதார நீதியிலும் பல்வேறு பின்னடைவுகளை சந்திக்க வேண்டி நேரிட்டுள்ளது….

Read More

பாராளுமன்றிலேயே பிரச்சினைக்கு முடிவு காண நடவடிக்கை எடுங்கள்; காலத்தை இழுத்தடிப்பதில் அர்த்தமில்லையென ஜனாதிபதியிடம் ரிஷாட் வலியுறுத்து!!

அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை பாராளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (27) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தில் சபாநாயகர் செயற்படும் முறை, அவரது தைரியம் துணிவு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளையும் சம்பிரதாயங்களையும் பாதுகாக்கும் பாங்கு ஆகியவை…

Read More

கண்டி, ஹிஜிராகமை மையவாடி பாதை செப்பனிடல் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின்  நிதி ஒதிக்கீட்டில், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீனின் வேண்டுகோளுக்கு அமைய, உடபலாத பிரதேச சபை வேட்பாளர் முகம்மட் ரமலானின் கோரிக்கைக்கு இணங்க, கண்டி, தெல்பிடிய ஹிஜிராகமை மையவாடிக்கு செல்லும் பாதையை செப்பனிட்டு கொண்ங்கிரீட் செய்யும் பணிகள்  நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உடபலாத பிரதேச சபை…

Read More

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வவுனியா ஆண்டியாபுளியங்குளத்தில் (வாழவைத்த குளம், ஆண்டியாபுளியங்குளம், புதுக்குளம்) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தையல் பயற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள், அமைப்பாளர் தாவூத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.  

Read More

பேசாலை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின்  7,100,000.00 ரூபாய் நிதியொதுக்கீட்டில்  பேசாலை வீதிக்கு காபட் இடும் பணிகள், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர்  எஸ்.எச்.எம்.முஜாஹிரினால் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேசாலை பிரதேச சபை உறுப்பினர் டிப்னா குரூஸ், பிரதேச சபை உறுப்பினர் சிலுவை பீரிஸ் ஐயா, வெற்றிமாதா பங்குதந்தை அவர்களும்,மன்னார் பொலிஸ் அதிகாரி (OIC),  பிரதேச சபை உறுப்பினர் றாசிக், இணைப்பளர் முசம்மில் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Read More

”ருத்ர தாண்டவமாடும் நிறைவேற்றதிகாரம்” மொண்டஸ்கியுவின் வலுவேறாக்கற் கோட்பாடு வலுப்படுத்துமா?

நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மை சமூகங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இப்போது வீணடிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் ஜனநாயக சோஷலிசக் குடியரசு அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதியுச்ச அதிகாரத்தை நாடு அன்றிருந்த சூழ்நிலையைக் கருதியே ஜே.ஆர் ஜெயவர்தன அறிமுகப்படுத்தினார். அவசரமாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு பாராளுமன்றத்தைக் கூட்டி ஆலோசனை கோரல், வாக்கெடுப்பு நடத்துதலில் காலதாமதம் ஏற்படுதல் என்பவற்றைக் கருத்திற் கொண்டே தனி நபருக்கான இவ்வுச்ச அதிகாரம் அறிமுகமானது. நாடு எதிர்கொள்ள நேரிடும் ஆபத்தான நிலைகள், சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்படும்…

Read More

சம்மாந்துறையில் வளத்தாப்பிட்டி,மஜீட்புரம் வீதிகள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.நௌசாட்டின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம், மிஹ்ராஜ் வீதி கொங்கிரீட் இடப்பட்டு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.நௌசாட்டின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை, மல்வத்தை 03,மஜீட்புரம் பூனப்பால்லர் வீதி கொங்கிரீட் இடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பியர் கிராமத்திற்கும் கடற்கரைக்குமான பாதை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க, தலைமன்னார் பியர் கிராமத்திற்கும், கடற்கரைக்குமான பாதையினை கொங்கிறீட் பாதையாக செப்பனிடும் பணிகள் நேற்று (21) பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பாதையானது மழை காலங்களில் நீர் நிறைந்து சேறும் சகதியாகவும் காணப்படுவதனால், மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதுடன், வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்ற வியாபாரிகளும் பெரும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”!

65 ஆவது வேலைத்திட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூபின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், வெள்ளைமணல், தி/அல் அஷ்ஹர் மகா வித்தியாலயத்தில் பிரதான நுழைவாயில் நிர்மாணப் பணிகள் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் மௌலவி ஹதியாத்துல்லாஹ்வின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், திருக்கோணமலை வலய கோட்ட கல்வி பணிப்பாளர் திரு அரியநாயகம்…

Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவியின் நிதிஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் DCB நிதி ஒதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் கிழக்கு கிளை மற்றும் புத்தளம் இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் வேண்டியதற்கமைய *180,000 ரூபா செலவில் புத்தளம் சவீவபுரம் உள்ளக ஒழுங்கைகளை ABC கற்களால் செப்பனிடலும், *250, 000 ரூபா செலவில் செய்னப் பாடசாலைக்கான சுற்று மதில் நிர்மானமும் (பகுதி நிதி பாடசாலை அபிவிருத்தி சபையும் அயலோரும்), *80,000 ரூபா பெறுமதியில் புத்தளம் கிழக்கு சி.த.மு…

Read More

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை” – மஹ்ரூப் எம்.பி திட்டவட்டம்!

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார். ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் நாம் போராடி வருவதை திரிபுபடுத்தி, எமது கட்சி தமது கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் இரண்டறக் கலந்து…

Read More