Headlines

வாசுதேவ நாணயக்காரவை கண்டிக்கும் அஸ்கிரிய மஹாநாயக்கர்




அஸ்கிரிய மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் பாராளுமன்றத்தில் வாசுதேவ நடத்து கொண்ட விதம் ஒரு போதும் அனுமதிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுடைய குழந்தைகள் தான் நாட்டில் எதிர்கால பிரதமர், ஜனாதிபதிகள் எனவே நாம் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது, பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *