Headlines

கெசல்கமுவ ஓயாவில் கறுப்பு நிறத்தில் நீர்! மக்கள் விசனம்




நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றிலிருந்து கழிவு தேயிலை தூளை கெசல்கமுவ ஓயா ஆற்றில் கொட்டுவதாக நீரை பாவிக்கும் மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

இதனால் கறுப்பு நிறத்தில் நீர் வருவதாகவும் சூழல் மாசடைவதாகவும் நீரை பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த பிரதேச மக்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *