Headlines

மொஹான் பீரிஸ்க்கு, 48 மணிநேர காலக்கெடு




பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்க்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றத்துக்கு முன்பாகவும் நீதியமைச்சுக்கு முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையால் பிரதம நீதியரசர் உயர்நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 44 ஆவது பிரதம நீதியரசருக்கு 48மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அப்பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நியமிக்குமாறும் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *