Headlines

இலங்கை முஸ்லிம் சமூக நலன்புரிமை அமைப்பினால் றிஷாத்பதியுதீன் பாராட்டி கௌரவிப்பு




A.S.M.இர்ஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாத் பதியுதீனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை(12) வெள்ளவத்தையில் நடைபெற்றது.

இலங்கை முஸ்லிம் சமூக நலன்புரிமை அமைப்பு கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாஸ ராஜபக்ஷ, ஆர்.யோகராஜன், அமீர் அலி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் புரவலர் ஹாசிம் உமர், மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி என அதிக எண்ணிக்கையிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *