Headlines

மூனின் கவனத்தை ஈர்க்க, யாழ்ப்பாண முஸ்லிம்களும் முயற்சி




இலங்கைக்கு இன்று (31) வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பானகீ மூனின் கவனத்தை ஈர்ப்பதற்காக யாழ்பாண முஸ்லிம்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்ற வேளை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஈடுபடவுள்ளார்கள்.
தமது பாரம்பரிய தாயகத்தில் மீள்குடியேற்றம், இதில் ஐ.நா. தலையிட வேண்டும், புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான தமக்கு தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் அதிகாரிகள் மேற்கொள்ளும் அநீதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *