Headlines

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து




சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை இரத்தானது,  கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்று (15) தொழிற்சங்க உறுப்பினர்களுடன் பேச்சுவார்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *