Headlines

முஸ்லிம் மக்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதில்லை – அமைச்சர் றிஷாத்




முஸ்லிம் மக்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதில்லை என அமைச்சர் றிஷாத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போர் காரணமாக மூன்று தசாப்த காலமாக பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றுவது குறித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுகின்றது. எனினும், இரண்டு மணித்தியாலங்களில் ஒரே மொழி பேசும் முஸ்லிம் மக்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவது கிடையாது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *