Headlines

SSPமஜீதை ஆதரித்து இடம்பெற்ற ACMCயின் பொத்துவில் கூட்டம்




அகில இலங்கை மக்கள் காங்கிரசில் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகின்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டமானது பொத்துவில் பிரதான வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலோடு ( 25 )இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பொத்துவிலில் இதுவரை தீர்க்கப்படாத கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மீன்பிடி, விவசாயம் என்பனவற்றின் பிரச்சினைகள் அமைச்சர் ரிசாத் பதியுதினின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

தேர்தலின் பின்னர் இப்பிரச்சினைகள உடனடியாக தீர்க்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *