Headlines

தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு




ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்க உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று முற்பகல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாரளுமன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *