Headlines

கட்சியின் செயற்குழு கூட்டம் இரத்து : ஜனாதிபதி அதிரடி




இன்று இரவு நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் இலங்கை மன்ற கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருப்பதாக கட்சியின்  பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளர்களிடம், கட்சி செயற்குழு கூட்டத்தை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *