Headlines

ஜனாதிபதி பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் – ரணில்




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை அவருக்கு கட்சியின் முழு அதிகாரங்கள் இருக்கவில்லை. எனவேதான் அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவர் தமக்கு பின்னால் உள்ள சூழ்ச்சிகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கினாலும் மைத்திரிபால சிறிசேன, பொதுத்தேர்தலில் எந்தக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் என்று ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *