“முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள ரமழானை பயன்படுத்துவோம்” –
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! ரமழானின் அருட்கொடைகள் சகலருக்கும் கிடைப்பதுடன், நோன்பு கால அமல்களில் சிறப்பாக ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்! அருள்பாலிக்க பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ரமழானை வரவேற்று, அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அல்லாஹுத்தஆலா ரமழான் மாத அமல்களுக்கு சிறப்புக் கூலி தருவதாக வாக்களித்துள்ளான். நமது முன்னோர்களும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் சிறப்பால் உயர்வடைந்ததாகவும் புனித…
