Headlines

களுத்துறை அஹதியா பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா!

களுத்துறை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (14) காலை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. அஹதியா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் உவைஸ் முஹம்மட், ஹைதராபாத் KIMS வைத்தியசாலையின் பொதுமுகாமையாளர் சுனில் தெஹ்ரி, களுத்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஆமிர் நாசிர், களுத்துறை உதவி…

Read More

அப்துல்லா மஹ்மூத் ஆலிமின் மறைவுக்கு தலைவர் ரிஷாட் அனுதாபம்!

இலங்கையின் மூத்த உலமாவும் புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு, ஆன்மீகத் துறையில் பெரும் இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் உயர் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆன்மீக சமூகத்தை உருவாக்குவதற்காக அப்துல்லா…

Read More

மக்கள் காங்கிரஸ் தவிசாளரின் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

இன்றைய தினம் தைப்பொங்கள் பண்டிகையை கொண்டாடும் மரியாதைக்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

Read More

Video-‘குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி’

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்! மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது….

Read More

VIDEO- மியன்மார் அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து நடவுங்கள்’

– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை! சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில், மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த…

Read More

புஹாரி பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!

பிரதம அதிதியாக Dr.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு! முள்ளிப்பொத்தானை, புஹாரி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிரதம ஆசிரியை சவ்ஜானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விழாவினை சிறப்பித்திருந்தார்.

Read More

VIDEO-‘வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்குங்கள்’

தாஹிர் எம்.பி சபையில் கோரிக்கை! பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வரும் வாகன வருமான வரி கட்டணங்களில், ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் புதன்கிழமை (08) பாராளுமன்றில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “உள்ளூராட்சி மன்றங்களானது வீதிகள், வடிகான்கள், பொதுச் சந்தைகள், களியாட்ட இடங்கள், மைதானங்கள், மயானங்கள், நூலகங்கள், திண்மக் கழிவகற்றல் போன்ற பல்வேறு சேவைகளை மக்களுக்காக வழங்கி…

Read More

VIDEO- முத்து முஹம்மட் எம்.பியின் பாராளுமன்ற கன்னி உரை!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால், முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு, பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற, வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, தனது கன்னி உரையை ஆற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தலைவர் ரிஷாட் ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைவர் ரிஷாட் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, (கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)  கௌரவ  ஜனாதிபதி அவர்களுக்கு, இலங்கையில் புகலிடம் கோரி வரும் ரோஹிங்கியா…

Read More

‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா!

வெலிகம, ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு, தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

Read More

ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான ஒன்றுகூடல்!

ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S. அமீர் அலி மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான M.S. சுபைர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More