Headlines

ACJU நிந்தவூர் கிளை – தாஹிர் எம்.பி சந்திப்பு!

நிந்தவூர் பிரதேச அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா சபையினருக்கும், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் எம்.பிக்குமிடைடையிலான சந்திப்பொன்று, (26) மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, உலமா சபையினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தஃவா பணியினை பாராட்டி பேசியிருந்த பாராளுமன்ற உறுப்பினர், ஊரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது மற்றும் போதை மருந்து பாவனையை தடுப்பது குறித்தும் உலமாக்களுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்ததுடன், எதிர்காலத்தில் உலமாக்களின் ஒத்துழைப்புக்களையும் வேண்டியிருந்தார். இந்நிகழ்வில், கட்சியின்…

Read More

பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவு கவலை தருகின்றது – தலைவர் ரிஷாட் அனுதாபம்!

சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் இஸ்ஹாக் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பொறியியல்பீடத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியதுடன், சிறந்த கல்வியியலாளர்களின் அவசியம் தொடர்பில்…

Read More

வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் (26) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read More

நீண்டகால தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

சாளைம்பைக்கேணி 01ஆம், 05ஆம் கொலனி (அமீர் அலி மைதானம்) பிரதேச மக்கள், மிக நீண்டகாலமாக குடிநீர் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக குழாய் கிணறை புனரமைத்து பாவனைக்கு உதவும் வகையில், செயற்படுத்த அதிக பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கவனத்திற்கு இப்பிரச்சினை கிராமவாசிகளால் முன்வைக்கப்பட்டது. மக்களின் அத்தியாவாசிய தேவை…

Read More

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (26) இடம்பெற்றது. செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேச செயலாளர் திருமதி சுலோஜனா மற்றும் அரச அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட…

Read More

பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவுக்கு தாஹிர் எம்.பி அனுதாபம்!

பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அனுதாபம் தெரிவித்துள்ளார் அவர் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் இஸ்ஹாக் (இஸ்ஹாக் ஹாஜியார்) அவர்கள், புனித மக்கா நகரில் வபாத்தானார் என்ற கவலை மிக்க செய்தியோடு இந்த நாள் நகர்கின்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து, நிந்தவூருக்கும் தென்கிழக்கு அழகிற்கும் தனித்துவ அடையாளமாக மிளிர்ந்தவர். பல்வேறு உயர்பதவிகளை உலகின் பல்வேறு…

Read More

சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நிகழ்வு!

சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நிகழ்வு, இன்று (26) காலை வவுனியா, பூந்தோட்டம், சுனாமி நினைவுத் தூபி முற்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளருமான முத்து முஹம்மட் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன் உட்பட சர்வமத பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More