மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு!
மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக,…
