Headlines

சமூகத்தின் மீது கொண்ட அதீத அக்கறையினாலேயே சஜித்துக்கு ஆதரவளிக்கின்றோம். கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட்.

முஸ்லிம் தலைமைகள் கொள்கை வேறுபாடு மற்றும் கருத்தியல் ரீதியான இடைவெளிகளை கொண்டுள்ள போதும் சமூகத்தின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கருத்தில்கொண்டே ஓரணியில் செயற்பட்டு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை எப்படியாவது கபளீகரம் செய்யவேண்டுமென்று…

Read More

ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் முற்போக்கு கூட்டணி,முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உருமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து…

Read More

அகதி வாழ்வில் 29 வருடங்கள் ; மீள்குடியேற்றம் நிறைவேற்றமடைய பிரார்த்திக்கின்றேன்:  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 

வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து, இழந்து போன நமது சமூகத்தின் உரிமைகளை  பெற்றுக்கொடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னை முழுமையாக தொடர்ந்தும் அர்ப்பணிக்குமென  அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் (31) 29 வருடங்கள் நிறைவடையும் நிலையில், இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வரும் மக்கள் துரிதகதியில் மீள்குடியேறவும், மீள்குடியமர்ந்து இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவுபெறாத வகையில்…

Read More

சிறுபான்மையினரின் வாக்குகளை சின்னாபின்னமாக்க சதி’ ஏமாந்துவிட வேண்டாமென வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,…

Read More

வரலாற்றுக் கடமைகளிலிருந்து வழிவிலகிய யதார்த்தம். வடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா?

காலவோட்டத்திற்கேற்ப தேர்தல் களத்தை எவ்வாறு நகர்த்துவதென்பதை நாடி பிடித்துப்பார்ப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீனுடன் கடந்த வாரம் சென்ற களப் பயணங்கள் சமூக உணர்வுகளை உரசிச்சென்றது. வடக்கின் தொடுவாயிலிருந்து ஆரம்பித்த எமது பயணம் தென்னிலங்கையின் மூலை முடுக்குகளையும் ஆழ ஊடுருவி நோக்கியதால், கள யதார்த்தங்களை கணிப்பிட இயலுமாயிற்று.இந்தக் கணிப்பீடு வெற்றி தோல்வி பற்றியதல்ல.முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்குள் ஊடுருவியுள்ள அச்சம் கலந்த ஆதங்கம், அடிப்படைவாதத்தின் அசல்,நகல் பற்றிய தௌிவுகளில் எமது சமூகத்தின் கணிப்பீடுகளை இக்கள விஜயத்தில் காண முடிந்தது. ராஜபக்ஷக்களின் தென்னிலங்கை…

Read More

மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் தலைமையில் விழுதுகள் ஊடாக மகளீர் சங்கங்களுடன் கலந்துரையாடல்..

“விழுதுகள்” ஊடாக நடைபெற்ற நிகழ்வில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் , கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும மாவட்டத்தில் உள்ள மகளிர் சங்கங்கள் அனைவரையும் இன்று அழைத்து கலந்து உரையாடல் நடைபெற்றது. அதில் அவர்களுடைய குறை , நிறைகளை கேட்டறிந்தார்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஊடாக பிரச்சினைகளை செய்து தருவதாக வாக்களிக்கபட்டது. இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி மற்றும் நகர சபை உறுப்பினர் டிலான் , நகர சபை உறுப்பினர் குமரேசன் , பிரதேச…

Read More

“ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம்”. பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

நாட்டில் நிலையான ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தோமோ அது போல் கோட்டாவையும் இம் முறை நிராகரிப்போம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (29) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது புதிய ஜனநாயக முன்னனணியின் ஜனாதிபதி வேட்பாபர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து உரையாற்றிய கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…

Read More

“சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்”. “ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து”.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஜனாதிபதி தேர்தல் அவதானிப்பு பணிகளில் கண்காணிப்பாளர்களாக ஈடுபட வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ஆய்வாளர் மாரு பொலாண்ட் தலைமையிலான…

Read More

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயக முன்னணியின் மூதூர் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் நாளை (30) புதன் கிழமை மாலை 2.00 மணிக்கு கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சஜீத் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெறவுள்ள இம் மாபெரும் பொதுக்கூட்டத்தில்…

Read More

சமூகத்தைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள், கொந்தாராத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு வாக்கு வேட்டை – குருநாகலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கும் தூதுவர் பதவிக்கும் நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கும் சோரம் போன நம்மவர்கள் கொந்தராத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வாக்கு கேட்டுவருவது வேடிக்கையான என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட போது, அவற்றைப் பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும், தாக்குதல் நடந்த காலங்களில் வீடுகளிலேயே பெட்டிப்பாம்பாக பேசா மடந்தையாக இருந்தவர்கள் இப்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்று மக்களிடம் சென்று ஆசை வார்த்தைகளை கூறி…

Read More

ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா

தாராபுரம் ஹாஜா அலாவுதீன் எழுதிய “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” மற்றும் “எங்க ஊரு பாட்டு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவும் அவரது 40 வருட கலை வாழ்வை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (27) தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கலாநிதி யூசுப் கே மரைக்கார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அறிமுகவுரையை கலைவாதி கலீலும் வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபாவும்…

Read More

சிறுபான்மை சமூகத்தின் எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் தருணம் இது’ குருநாகலில் அமைச்சர் ரிஷாட்!!!

இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? அல்லது சிறுபான்மை இனத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல், கால்லேகமவில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து…

Read More