Headlines

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச்சங்கங்களின் தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டுஇ சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சில முன்னேற்றகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன . அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தித்து தமது தொழில் தொடர்பில் எதிர் நோக்கும் கஷ்டங்களை எடுத்துரைத்த போதே துறைசார் அமைச்சர் என்ற வகையில் இவர்களின்…

Read More

மதவாச்சி பிரதேசத்தில் விதிப்புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்…..

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் இன்று மதவாச்சி பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினைகளை இருந்த உள்ளக விதிகளை அவரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார் இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் அபிவிருத்தி சங்க  உறுப்பினர்களும்கலந்துகொண்டனர்….

Read More

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற போது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் , அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களும் கலந்துகொண்டார்.

Read More

ஒலுவில் துறைமுகத்திற்கு துறைமுக பிரதி அமைச்சர் விஜயம்

ஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எந்தவொரு சமூகத்தினருக்கும் பாதிப்பில்லாத வகையில் உடனடியாகத் தீர்த்து வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விடயங்களை எத்திவைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைக் கண்டறியும் வகையில் நேற்று(20) மாலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு மீனவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும்…

Read More

எம்மில் ஏற்படுகின்ற மாற்றமே சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் – இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

நாம் என்றும் ஒற்றுமைப்பட்டவர்களாக இருப்போமானால், எங்களுடைய பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு இறைவன் வாய்ப்பினைத்தருவான் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். மீராவோடை றிழ்வான் பள்ளிவாயலுக்கு அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (19) இஷாத்தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில், ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள பள்ளிவாயல்கள்…

Read More

மாவடிச்சேனையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கு வரவேற்பும் கௌரவிப்பு வைபவமும்

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை வரவேற்று கௌரவிக்கும் வைபவம் நேற்று 18.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிச்சேனை வட்டாரக்குழுவின் ஏற்பாட்டிலும் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், அல் இக்ரா விளையாட்டுக்கழகம், டோன் டச் விளையாட்டுக்கழகம், ஸைபுல்லாஹ் தற்காப்புக் கலைக்கழகம் ஆகியவற்றின் பங்குபற்றல் மற்றும் ஒத்துழைப்புடனும் வட்டாரக்குழுத்தலைவர் ஏ.எல். சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம…

Read More

மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பிரதியமைச்சர்

திருகோணமலை – குச்சவெளி, இக்பால் நகருக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதன்போது கிராம சேவகர் கட்டடத்தில் மக்களுடனான சந்திப்பினை ஏற்பாடு செய்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார். குறித்த நபர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த திட்டத்துக்கான தகுந்த ஆவணங்களை ஒப்படைக்குமாறும் இதன் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நிலாவெளி கோபாலபுரம் பள்ளியில் அமைச்சர் தலைமையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. கிராம மக்கள் எதிர்நோக்கும்…

Read More

அலுவலகம் திறப்பதை தடுப்பது இன விரோதத்தின் உச்சக்கட்டம். தமிழ் தரப்பு மீது இராஜாங்க அமைச்சர் அமீர் அலி விசனம்…

கடந்த காலங்களில் போராட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை வெட்டியது, கொள்ளையடித்தது, கொலை செய்தது வெறிபிடித்தவர்கள் இப்போது வந்து ஜனநாயக அமைப்பை பற்றி அல்லது முஸ்லிம் தமிழ் உறவைப்பற்றி, முஸ்லிமுக்கு கொடுக்கப்பட்ட ஆளுனரை பற்றி பேச வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியாத சூழல் காணப்படுகின்றது என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி 3ம் வட்டார கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை…

Read More

கம்பனி பதிவாளர் திணைக்கள நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிப்பு – திங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவு

கம்பனி பதிவுகளை மட்டுமே ஒன்லைனில் மேற்கொண்டு வந்த கம்பனி பதிவாளர் திணைக்களம்,  எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம்  அந்த நடைமுறையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் நிறுவனங்கள், செயலாளர்கள், கணக்காய்வாளர்கள், சங்கங்கள் ஆகியவையும் ஒன்லைனில் பதிவுகளை மேற்கொள்ள எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பதிவாளர் திணைக்கள நாயகம் ஆர்.எஸ். சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும் கம்பனி பதிவாளர் திணைக்கள அதிகாரிகளுக்கும்…

Read More

கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளேன். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

தி/கிண்ணியா குறிஞ்சாக்கேணி மகளிர் மகாவித்தியாலயத்தின் தரம் ஒன்றுக்கான 2019 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று (17) வியாழக்கிழமை அதிபர் எஸ்.டி.நஜீம் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது பாடசாலை வளாகத்தில் அமையப் பெற்றுள்ள புதிய நவீன வகுப்பறை கட்டிடம் (Smart Class Room) வகுப்பறையும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை…

Read More

மீள்குடியேற்ற அதிகாரம் றிஷாட் பதியுதீனிடம் மீளக்கிடைத்தது!!!

கௌரவ றிசாத் பதியுதீன் அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் வடபுல முஸ்லிம்கள் சுதந்திரமாக சென்று மீள்குடியேறக் கூடிய சூழல் நிலவவில்லை. முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பூர்வீகக் கிராமங்கள் விடுவிக்கப்பட்டு இருக்கவில்லை.ஆனால் வன்னி யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கி இருந்த 300 000 குடும்பங்களை இவரால் குடியேற்ற முடிந்தது. நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தும் என்னால் வடபுல முஸ்லிம்களை கௌரவமாக மீள்குடியேற்ற முடியவில்லையே என்ற கவலை இவரை வெகுவாக வாட்டியது.இவரின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சர்களாக இருந்தோர்…

Read More

துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் ஊழியர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.

இலங்கையில் காணப்படும் துறைமுகங்கள் தெடர்சியான அபிவிருத்திக்கு இட்டுச்செல்லப்படும் துறைமுகங்களில் காணப்படும் ஊழியர்களின் பிரச்சினைகள் உற்பட பல குறைகள் தீர்க்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளனர். துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து உறையாற்றுகையில் அம்பாந்தோட்டை கொழும்பு காலி திருகோணமலை போன்ற மாவட்டங்களில் துறைமுகங்கள் காணப்படுகின்றன இவ்வாறான துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் நாட்டின் தேசிய…

Read More