சஹ்ரானை சந்தைப்படுத்த முடியாதென்பதால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்: ரிஷாத் பதியுதீன்
இன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாதி சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் எடுத்துரைத்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் சஹ்ரானை அரசியல் ரீதியில் சந்தைப்படுத்த முடியாது என்பதால் அவர்களுக்குப் புதிய இலக்குகள் தேவைப்படுகிறது. ஆகையால் அதற்கு தன்னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இலக்கு வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை…
