சிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’
இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் அனுசரணையில், தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். வவுனியா மாவட்ட மகளிர் அமைப்பின் அமைப்பாளரும், தையல் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளருமான…
