Headlines

பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் திருகோணமலைக்கு வெளியில் நியமனம் பெற்றவர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியாற்ற உத்தரவு

திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்ற அனைவரையும் தங்களது சொந்த மாவட்டத்தில் கடமைகளை பொறுப்பேற்று பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலையில் அண்மையில் நியமனம் பெற்ற 193 பட்டதாரி பயிலுனர்களில்  நியமனத்தின் போது பலர் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியில் உள்ள திணைக்களங்களில்  தங்களது கடமைகளை பொறுப்பேம்குமாறு கடிதங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இது விடயமாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்றவர்கள் பிரதியமைச்சரின் கவனத்திற்கு தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு நடவடிக்கைகளை பெற்றுத்…

Read More

தி/ஸாகிரா கல்லூரிக்கு அமைச்சர் றிசாத் விஜயம்

திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார். பாடசாலை அதிபர் அலி சப்ரி தலைமையில் வெள்ளிக் கிழமை (02) குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டு பாடசாலை வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும் இதன் போது பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பாடசாலை நிருவாக உத்திதோகத்தர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்

Read More

” ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம் எம்.பிக்கள் என்றுமே செயலாற்றியதில்லை” தெஹிவளை ஜும்ஆ பள்ளி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது  தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் இணைந்து தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசலில் நேற்று (04)  நடாத்திய விசேட மாநாட்டில் உரையாற்றிய போது அமைச்சர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அச்சம்,மன உளைச்சல்கள்  மற்றும் பாதிப்புக்கள் குறித்து முன்னாள் அமைச்சர்…

Read More

உயர்தரப் பரீட்சையை வெற்றி கொள்ள இறைவனை பிரார்த்திக்கிறேன்

தற்போது ஆரம்பமாகியிருக்கும் கா.பொ.தா.சா.தர உயர்தரப்பரீட்சையில் சகல மாணவர்களும் வெற்றிகொள்ள வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். உயர்தரபரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இன்று (05)விடூத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மாணவச் சமூகம் உயர்தரபரீட்சையின் பின்பு சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் பல துறைகளிலும் சாதித்து நாட்டில் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் இவ்வாறான கட்டங்களை எதிர்காலத்தில் தாண்டி சிறந்த…

Read More

உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் அமீர் அலி வாழ்த்து

ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதே கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை தான். இப்பரீட்சையின் வெற்றியென்பது அந்த மாணவனை வெற்றியின் விழிம்பிற்கே கொண்டு சென்று விடுகிறது. எனவே, குறித்த பரீட்சைக்குத்தோற்றும் அனைத்து மாணவர்களும் சித்தியடையவும் பல்கலைக்கழக வாய்ப்பைப்பெறவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உயர் தரத்தேர்வில் சறுக்குகின்ற மாணவன் முழு வாழ்க்கையையுமே இழப்பதற்குச் சமமான நிலைக்குத் தள்ளப்படுகின்றான். அவ்வளவு தூரம் குறித்த…

Read More