Headlines

டாக்டர்.ஜெமீலின் இராஜினாமாவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவராக இருந்த டாக்டர். ஜெமீல் தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும், கட்சி தொடர்பான அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததை அடுத்து,  கட்சியின் அரசியல் அதிகார பீடம் கொழும்பில் நேற்று இரவு (28) கூடிய போது, அவரது இராஜினாமாவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக செயலாளர் எஸ்.சுபைதீன் தெரிவித்தார். (ஊடகப்பிரிவு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) Media Unit All Ceylon Makkal Congress Colmbo, Srilanka

Read More

அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகார பீடம் அங்கீகாரம் – செயலாளர் சுபைதீன் அறிக்கை

அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்தார். அதிகாரபீடக் கூட்டம் நேற்று (28) இரவு கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மற்றும் எமது தலைவர்…

Read More

சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் -முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சி போர்வைக்குள் சகல சிறுபான்மை கட்சிகளும் ஒன்றினைந்து அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடல் மூலமே தெரியவந்தது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (25) வியாழக் கிழமை அமைச்சர் சஜித் தலைமையில் செமட்ட செவண இரு மாதிரிக் கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…

Read More