Headlines

விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தலும் , 25 விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் இடம்பெற்றது

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீரா நகர் பொது விளையாட்டு மைதான சுற்றுமதில் நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி ஹாஜியாரின் வேண்டுகோளிற்கிணங்க நேற்று (16) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் மைதானத்துக்கான சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அங்குரார்ப்பண வைபவம்…

Read More

நம்பிக்கையில்லா பிரேரனை மீண்டும் தோற்கடிக்கப்பட்டு கட்சி பேதமற்ற ஒற்றுமையை அரசுக்கு வழங்கியுள்ளோம்- முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

அரசாங்கத்து எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை கட்சி பேதமற்ற முறையில் மீண்டும் தோற்கடித்து சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (14) திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற…

Read More

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் AKM வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் AKM வீதிக்கு இருபது லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைப்பு வேலைகள் இன்று 13.07.2019 இணைப்பாளர் லத்தீப் ஹாஜி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை தலைவர் வாஸித் அலி , நகர் சபை செயலாளர் , ஷக்கி ஹாஜி, மற்றும் ஏறாவூர் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை எதிர்காலத்தில் நிலை நிறுத்துவோம்-அப்துல்லா மஃறூப் எம்.பி

இனி வரும் காலங்களில் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை நிலை நிறுத்துவோம் எமது சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமையோடு இந்த மண்ணில் வாழ வேண்டிய நிலையான ஆட்சியாளர்களை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதியோடு இருப்போம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக் கிழமை(14) கலந்து கொண்ட கிண்ணியா மத்திய கல்லூரியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே இவ்வாறு…

Read More