ஆத்மீக பணியில் ஈடுபடுபவர்களை வீணாக விமர்சித்து இனவாதிகளுக்கு தீனி போடாதீர்கள்! – ரிஷாத் பதியுதீன்
முஸ்லிம் சமூகத்தை ஆத்மீக, லெளகீக ரீதியில் வழிநடத்தும் உலமா சபையை நாம் விமர்சிப்பது இனவாத மத குருமார்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வெல்லம்பிட்டி அகதியதுல் தாருஸ்ஸலாம் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா கொழும்பு, மருதானை டவர் மண்டபத்தில் நேற்று (14) மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, நமது சமூகத்தில்…
