அல் குர் –ஆனின் 30 ஆயத்துக்களுக்கான சிங்கள விளக்கத்தை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு ரிஷாத் சமர்ப்பிப்பு
புனித அல்-குர்ஆனை விமர்சிப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள்அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் (எம்.பி)பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றில் நேற்று (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ; “மத குரு ஒருவர் புனித அல்-குர் ஆனை இந்த உயர் சபையில் விமர்சித்திருக்கின்றார். எமது வேதநூலான புனித குர்-ஆன் பெருமானார் (ஸல்) அவர்கள்எழுதியது அல்ல. அவருடைய கற்பனையில் வந்ததும் அல்ல. இறைவன் ஜிப்ரீல் அலை(ஸல்) அவர்கள் மூலமாக அல்-குர் ஆனை…
