அமைச்சர் றிசாத் எவ்வித காரணங்களுக்காகவும் அமைச்சு பதவியை இராஜினமா செய்யமாட்டார்- பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்படத் தெரிவிப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எவ்வித காரணங்களுக்காகவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்பட தெரிவித்தார். திருகோணமலை உவர் மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று (02) ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில் அமைச்சர் மீதான வீண் பழி சுமத்துவதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் அவர் மீது கொண்ட…
