Headlines

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப  முயற்சி:  அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி 

அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு போராட்டத்தை திசை திருப்பும் வகை சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக கைத்தொழில், வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கலைவாதி கலீலின் பவள விழாவும் “என் வில்பத்து டயரி” நூல் வெளியீடும் கொழும்பு…

Read More

தெம்பிரியத்தேவல முஸ்லிம் வித்தியாலயத்தில் வகுப்பறைகான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளுக்கு இணங்க அல்-ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் அல் ஹாஜ் நூறுல்லாஹ் அவர்களின் ஊடாக குவைட் நாட்டு அரசின் நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெம்பிரியத்தேவல முஸ்லிம் வித்தியாலயத்தில் சகல வசதிகளுடனும் கூடிய வகுப்பறை கட்டிடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது.

Read More

தோப்பூருக்கான தனி பிரதேச செயலகத்தை தடுப்பது இரா.சம்மந்தனே

இன்றைய காலத்தில் பேசுபொருளாக மாறிவருகிறது தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான தனியான செயலகம் இதனை தடுப்பதற்கும் மூக்கை நுழைத்து செயற்படுவது அநியாயமாகும் இதற்கான தடைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்மந்தன் அவர்களே மேற்கொண்டு வருகிறார் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். தோப்பூரில் இன்று (20) இடம் பெற்ற பள்ளிவாயல் நிருவாகிகளுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்….

Read More

பாணந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்

களுத்துறை மாவட்ட, பாணந்துறை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம், பாணந்துறை மல்சரா மண்டபத்தில் இன்று புதன் (20) மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை மையமாகக்கொண்ட அமைப்பாளர் ரிஸ்வி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கட்சியின் தவிசாளர் விவசாய, மீன்பிடி, நீரியல்வள இராஜாங்க அமைச்சர் கெளரவ அமீர் அலி கலந்து கொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார். சிறப்பதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன், பாணத்துறை ஜீலான் மத்திய…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் முயற்சியினால் ஒலுவில் கரையோர காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கலும் மீனவர்களுக்கான தொழிலை மேற்கொள்ள மண்களை அகற்ற துரித நடவடிக்கை!!!

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். அமைச்சர் சாகல அவர்களை இன்று (19) அமைச்சில் வைத்து  சந்தித்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் துறை முகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க , துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க ,முகாமைத்துவப்…

Read More

காங்கேசன் துறை முகத்திலிருந்து இந்தியாவுக்கு கப்பல் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை முகத்திலிருந்து இந்தியா காரைக்கல் பகுதிக்கான கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்றது. துறை முக அதிகார சபையின் தலைவர் அலுவலகத்தில் இன்று (19) இடம் பெற்ற குறித்த சந்திப்பில் கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஊடாக பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள், இலகு சேவை கட்டணங்கள், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட…

Read More

ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர்  அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது- ஒலுவிலில் வைத்து பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர் அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது மீனவச் சமூகம் , ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் வரையான குடியிருப்பாளர்கள் இரு சமூகமும் பாதிக்கப்படாத வண்ணம் செயற் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். ஒலுவிலில்(  18) துறை முக அதிகார சபையின் விடுதியில் மீனவச் சமூகம் மற்றும் பள்ளி நிருவாகம் ஆகியோர்களுக்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்….

Read More

விஸ்டம் சர்வதேச பாடசாலை வாசிகசாலை மற்றும் கணணிக்கூட திறப்பு.

களுத்துறை மாவட்டத்தில் 6 கிளைகளுடன் இயங்கும், விஸ்டம் சர்வதேசப் பாடசாலை, பேருவளை சீனங்கோட்டை கிளையின் வாசிகசாலை மற்றும் கணணிக்கூடம் திறப்பு விழா இன்று (18) திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், கெளரவ அதிதியாக பேருவளை நகர சபை உறுப்பினர் ஜனாப் தில்ஷாத் அன்வர், விஸ்டம் சர்வதேச பாடசாலை தலைவர் அஷ்ஷெய்க் பெளஸர் (நளீமி), அதிபர் ஷகீல்…

Read More

கொழும்புடன் நேரடி விமான சேவையை மேற்கொள்ள காபூல் விருப்பம்!

“இலங்கையுடன்  நேரடி விமான சேவை ஒன்றை நடத்த ஆப்கானிஸ்தான் அழைப்பு   விடுத்துள்ளது”. ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த போதே இந்த அழைப்பை விடுத்ததோடு இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு (INVESTMENT,PROTECTION AND PROMOTION-IPP) ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் விருப்பம் வெளியிட்டுள்ளது. “இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான்  தனது அயல்  நட்புறவு நாடுகளுடனும் பிராந்தியத்திற்கு அப்பாலும்  விமான சேவையை நடாத்தி உள்ளூர் உற்பத்தி பொருட்களை எடுத்து சென்றது….

Read More

அரச அதிகாரிகள், காணி பெற முடியுமென்றால் அப்பாவி மக்களுக்கு ஏன் தடை போடுகின்றார்கள்.? – ரிப்கான் பதியுதீன் ஆவேசம் 

” நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார். 25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாரும் அந்தக் காணிகள் அரச காணிகள் என அதிகாரிகளால் கூறப்படுவது தொடர்பிலும்,  எழுந்துள்ள பிரச்சினையை அடுத்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கான…

Read More

முட்கம்பி வேலிக்குள்ளே முடங்கி கிடந்தவர்களும் எம்முடன் இணைந்து பயணிக்கின்றனர்; தமிழ் ,சிங்கள ,முஸ்லிம்களை அரவணைத்து செல்வதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!  

முட்கம்பி முகாமுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் மக்கள் கூட  தனது அரசியல்பயணத்தில் இணைந்து பலம் சேர்த்துள்ளதாகவும் , முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்து ,கிறிஸ்தவ , பௌத்த சகோதரர்களும் மக்கள் காங்கிரசின் வளர்ச்சிக்கு வலுவூட்டி வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (16) கலந்து கொண்டார். அதிபர்…

Read More

ஒலுவில் துறைமுக பிரச்சினைகள் தொடர்பாக ஆராய பிரதியமைச்சர் அபத்துல்லாஹ் மஹ்ரூப் விஜயம்!!!

அம்பாறை ஒலுவில் துறை முகம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய மூன்றாம் கட்ட விஜயம் ஒன்றை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மேற்கொண்டார். குறித்த விஜயமானது இன்று (17) இடம் பெற்றதுடன் மீனவர்களின் பிரச்சினைகள், கரையோர கடலரிப்பு போன்றனவும் தொடர்பில் ஆராயப்பட்டன இது தொடர்பாக பொறியியலாளர் குழுவினை நியமித்துள்ளதுடன் தெளிவான பட ஆதார விளக்கங்களையும் பிரதியமைச்சர் மீனவர்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்களுக்கும் முன்வைத்தார். இது தொடர்பில் தெளிவான முடிவுகளை நிரந்தரமான…

Read More