Headlines

சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார் பிரதேசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

மன்னார் பிரதேச சபையின் 12வது அமர்வின் போது முசலி பிரதேசபைக்குட்பட்ட சிலாவத்துரையில் கடற்படையினரால் ஆக்கிரமிப்புக்குள்ளான காணியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் தீர்மானம் தவிசாளர் முஜாஹிர் அவர்களினால் கொண்டுவரப்பட்டு உறுப்பினர்களின் முடிவுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை 21சபை உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கிகரித்ததுடன்  உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது. மேலும் இன மதத்துக்கு அப்பால் 21 நாட்களாக முசலி பிரதேசத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இந்த முசலி பிரதேசத்தில் 32…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல்…

துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களை இலங்கை துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவா விதான ஆகியோர்கள் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது இன்று (13) கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. துறை முக ஊழியர்கள் சார் பிரச்சினைகள், துறை முக அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன. குறித்த சந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச்…

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் முயற்சியால் கொழும்பு கலைமகள் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக்கட்டிடம்!

கொழும்பு 14 ஸ்ரீமாவோ பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள கலைமகள் வித்தியாலயத்தில் மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா பாடசாலை  அதிபர் தலைமையில் நேற்று (11) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. ரூபா 80…

Read More

அரச நெற்களஞ்சியங்களின் நெற்கொள்வனவுகள் அதிகரிப்பு செய்யப்பட வேண்டுமென பேராசிரியர். எஸ் . எம். எம். இஸ்மாயில் எம்.பி தெரிவிப்பு!!!

அம்பாரை மாவட்டத்தில் சோளப்பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் “சேனாபுழுக்களின் ” பாதிப்பினால் பாதிப்படைந்துள்ள அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு இன்று அம்பாரை மாவட்ட கச்சேரியில் மாவட்ட செயலாளர் D.M.L பண்டார அவர்களின் தலைமையில் விவசாய , கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி கௌரவ. அமைச்சர் ஹரிஸன் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றிய நமது பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். எஸ் . எம். எம். இஸ்மாயில்…

Read More