Headlines

கலாவெவயில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக திறப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப்பலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீமின் வேண்டுகோளுக்கு இனங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிராத்தித்தலைவருமான இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்படட நிதியொதுக்கீட்டில் கலாவெவ 491 குசலானகம துலானையில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட ஈச்சன்குலம் ஒழுங்கை வீதி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததனார்

Read More

கிண்ணியா கிராமப்புற பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா அல் அக்லா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது  (27) புதன் கிழமை பாடசாலை அதிபர் கே.பிர்தௌஸ் தலைமையில் இடம் பெற்ற இவ் விழாவில்  பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் கலந்து கொண்டார். பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்களால் இசை வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாடசாலை மைதானத்துக்கான பார்வையாளர்…

Read More

நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு

வவுனதீவு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு (25) இணைப்பாளர் மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு நிதியை கையளித்தார். இந்நிகழ்வுக்கு மாவட்ட இணைப்புச் செயலாளர் லோகநாதன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

கல்கமுவ மொடல் முஸ்லிம் மகாவித்தியாளைய கல்வி, அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையில் கல்கமுவ மொடல் முஸ்லிம் மகாவித்தியாளய அபிவிருத்தி மற்றும் கல்விக்கு உதவுதல் போன்ற விடையங்களை பாடசாலை நிருவாகத்துடன் கலந்து ஆராய்ந்து பாடசாலையின் எதிர்கால அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில். முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான எம்.என்.நஸீர்  அவர்கள்  (26 – 02 – 2019) பாடசாலை அபிவிருத்தி குழுவின் அழைப்பின் பேரில் பாடசாலைக்கான…

Read More

இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

உணவு பதணிடல் மற்றும் உணவு பொதியிடல் துறையானது இன்று இலங்கையிலையே தவிர்க்க முடியாத தலைசிறந்த துறையாக மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த உணவு பொதியிடலுக்கான சர்வ தேச எக்ஸ்போ தொடர்ந்து அதன் உற்பத்தித் துறைக்கான நாட்டின் மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வாக மாறியுள்ளது. உணவு பொதியிடலுக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி  2001 ஆம் ஆண்டில  தொடங்கப்பட்டது….

Read More

கிண்ணியா அல்மினா பாடசாலைக்கான புதிய இரு மாடிக் கட்டிடம் பிரதியமைச்சரால் திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட தி/கிண்/ அல்மினா மகாவித்தியாலயத்துக்கான புதிய இரு மாடிக் கட்டிடத்தை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்  (27) உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்தார். பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற குறித்த கட்டிடம் பிரதியமைச்சரினால் திறந்து மாணவர்களின் பாவனைக்கு விடப்பட்டது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் PSD திட்டத்தின்  கீழ்  உள்ள  நிதி ஒதுக்கீட்டில் சுமார் 95 இலட்சம் ரூபா செலவில்  பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில்  குறித்த…

Read More

கிண்ணியாவில் இயங்கும் இலங்கை மின்சார சபை பிரதேச காரியாலயம் எவ்வித வசதிகளுமின்றி பல குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது

திருகோணமலை மாவட்டத்துக்கு மின் சக்தி, எரிசக்தி மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச தலைமையிலான குழுவினர் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயத்தை (27) புதன் கிழமை  மேற்கொண்டுள்ள அமைச்சர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இலங்கை மின்சார சபை உயரதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் ரவி கருணாநாயக்க கொழும்பு மாத்திரம் அபிவிருத்தி அடைய வேண்டும்…

Read More