மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி!
-ஊடகப்பிரிவு- ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றது. மருதமுனை அல்ஹாஜ் நெய்னா முஹம்மத் (JP) அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்த்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மருதமுனை மத்திய குழுத் தலைவர் கலீல் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
