Headlines

மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி!

-ஊடகப்பிரிவு- ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று  (30) இடம்பெற்றது. மருதமுனை அல்ஹாஜ் நெய்னா முஹம்மத் (JP) அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்த்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மருதமுனை மத்திய குழுத் தலைவர் கலீல் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்களும்  பங்கேற்றிருந்தனர்.        

Read More

மன்னார் புதிய ஆயருக்கு அமைச்சர் ரிஷாட் வாழ்த்து தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, மரியாதைக்குரிய பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ அவர்கள் கடமையேற்கும் நிகழ்வு, மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இன்று (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன, புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.      

Read More

திக்கும்புர லங்கா சதொச அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் சந்திம வீரக்கொடி, அமைச்சர் ரிஷாட்டுக்கு நன்றி தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு-  எனது வேண்டுகோளை உடன் ஏற்று, திக்கும்புர மக்களுக்காக லங்கா சதொச கிளையை அமைத்துத் தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். காலி மாவட்டத்தின் திக்கும்புர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் (29) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சந்திம வீரக்கொடி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, எனது தொகுதியான திக்கும்புர…

Read More

செல்வநகர் மக்கள் சந்திப்பில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- தோப்பூர், செல்வநகரில் இன்று மாலை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பங்கேற்றார். இங்கு உரையாற்றிய அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திலே அதிகமான வட்டாரங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தருவான். சிறுபான்மை மக்களின் சேவைத் தலைவராக மக்கள் பணியாற்றி வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்காக துஆ செய்யுங்கள் என்றும்…

Read More

‘கல்முனை மாநகர சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி’ சிராஸ் மீராசாஹிப் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் மேயரும், மக்கள் காங்கிரஸின் பிரதி தேசியமைப்பாளரும், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவை நான் மதிக்கின்றேன்….

Read More