Headlines

வாழ்க்கையை வாழத் தெரியாத ரிஷாட் பதியுதீன்! எஸ். ஹமீத்

  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஹமீத்திடமிருந்து ஒரு கடிதம்!  பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பெரும்பான்மைகளுக்கு மத்தியில் எங்கெல்லாம் இஸ்லாமிய சமூகம் சிறுபான்மையாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் அந்தச் சமூகத்துக்கு எதிரான அட்டூழியங்களும் அநியாயங்களும் நடந்து வருவதே உலகின் விதியாகிப் போய்விட்டது. ஆனாலும், அந்தஅட்டூழியங்களையும் அநியாயங்களையும் எதிர்த்துப் போர் தொடுக்க அஞ்சா நெஞ்சமும் ஆண்மைத் திறனுமிக்க ஒருவரை எல்லாம்…

Read More

‘உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இலங்கைக்கு முக்கியமானது’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்-

-ஊடகப்பிரிவு- இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு பல்துறை வர்த்தக முறைகள் மீதான, உலக வர்த்தக அமைப்பின் தலைமையிலான விதிகள் அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு நிலையான மட்டத்தை செயற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது செய்தியில் தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பர் 10 ஆம்  திகதி முதல் 13 ஆம் திகதி வரை,  ஆர்ஜென்டினா ப்யூனோஸ் ஏர்ஸில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 11 ஆவது உலக…

Read More

‘இன‌வாதிக‌ளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் த‌லைமையிலான‌ ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முன்வர வேண்டும்’ உலமா கட்சித் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என‌ அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளும் ஐக்கிய தேசியக் கட்சியுட‌ன் இணைந்தே உள்ள‌ன‌ என்ற ய‌தார்த்த‌தை முஸ்லிம்க‌ள் இன்ன‌மும் புரிந்து கொள்ள‌வில்லை. இவ்விரு க‌ட்சிக‌ளும் ஐ.தே.க வுடன் இணைந்தே மைத்திரியை ஜ‌னாதிப‌தியாக்கின‌. இரு க‌ட்சிக‌ளும் ஐ.தே.க வுட‌ன் இணைந்தே  ஐ.தே.க‌ த‌லைவ‌ர் ர‌ணிலை பிர‌த‌ம‌ர் ஆக்கின‌. இந்த‌ நிலையில் ம‌யில் யானையுட‌ன் இணைந்தால் ஹ‌லால், ம‌ர‌ம் யானையுட‌ன் இணைந்தால் ஹ‌ராமா என‌ ச‌மூக‌ம் கேட்ப‌து அத‌ன்…

Read More

மக்கள் காங்கிரஸ் வேற்பாளரை ஆதரிக்கும் புதுவெளி வட்டார மக்கள்!

ஏ.எம்.ரிஸாத் நடைபெறவிருக்கும் முசலி பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, புதுவெளி வட்டாரத்தில் போட்டியிடும் அப்துர் ரஹ்மான் மெளலவியை ஆதரித்து, கரம்பை கிராமத்தில் வசிக்கும், புதுவெளி கிராம மக்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கல்விமான்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  மூலம் எமது கிராமத்துக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் செய்து தரப்பட்டு இருக்கிறது. அதேபோல் வேலைவாய்ப்புகள் இன்னும்…

Read More

‘மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை’ சட்டத்தரணி அன்சில்!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் பாலமுனை வட்டாரத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அன்சில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே…

Read More

“கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம். மக்கள் மீது பூரண நம்பிக்கை உண்டு” ஜவாத்!

-ஊடகப்பிரிவு- பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை, வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற பார்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, கல்முனை மாநகரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் மனம் உவந்து தருவார்கள் என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்தார். இவர் கடந்த வாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து…

Read More

சாய்ந்தமருது மக்களின் போராட்டம மு.கா கொச்சைப்படுத்துகிறது.. அ.இ.ம.கா கெளரவப்படுத்துகிறது..

  -துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்- சாய்ந்தமருது மக்கள் தங்களது போராட்டத்தின் இன்னுமொரு வடிவமாக, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை களமிறக்கியுள்ளனர். இவர்களின் இந்த முடிவு மிகவும் நியாயமானதும், அவசியமானதும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதேபோன்ற திடமான முடிவை அட்டாளைச்சேனை மக்கள் எடுத்திருந்தால், இன்று அவர்களின் கையில் தேசியப்பட்டியல் இருந்திருக்கும். இதே முடிவை பொத்துவில் மக்கள் எடுத்திருந்தால், இன்று அவர்களின் கையில் தனியான கல்வி வலயம் கிடைந்திருக்கும். சம்மாந்துறை மக்கள் எடுத்திருந்தால், சம்மாந்துறை பிரதேசசபை, நகர சபையாகி…

Read More