Headlines

மல்கடுவாவ பிரதேச மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின்  மல்கடுவாவ பிரதேச பெரும்பான்மை மக்களுடனான சந்திப்பொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)  மல்கடுவாவ பிரஜா மண்டபத்தில்  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான  அசார்தீன் மொய்னுதீனின் தலைமையில் இடம்பெற்ற  இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், சேவைகள்  மற்றும் மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.    

Read More

பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தினருடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- பாகிஸ்தான் நாட்டின் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் உயர் அதிகாரிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (12)  அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் ரிஸ்வான் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.        

Read More

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வழிகாட்டி வெளியீடு!

-ஊடகப்பிரிவு- ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது படிப்படியாக விபரிக்கும் அகல் விரிவான வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான “ஐரோப்பிய ஒன்றிய GSP+ வணிக வழிகாட்டி” என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்த வழிகாட்டி கையேடு, ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச வணிக மையமும் [ITC], இலங்கை அரசாங்கமும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டி கையேட்டை இப்போது இணையத்தளத்தில் பார்வையிடலாம். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,…

Read More

“புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பால் கிழக்கில் பாரிய மாற்றம் ஏற்படும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித்- புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கிலும், ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி அமைச்சர அமீர் அலி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கோறளைப்பற்று பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை திங்கட்கிழமை (11) செலுத்தினர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கோறளைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுகின்றது….

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அநுராதபுர மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்து களமிறங்குகின்றது!

-ஊடகப்பிரிவு-    அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை, மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேச சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று காலை (12) அநுராதபுர…

Read More

பிறைந்துறைச்சேனை அல்/இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா!

-முர்ஷித்- சிறுபான்மை சமூகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் / இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது  பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- பௌத்த நாட்டிலே சிறுபான்மை சமூகமாக வாழ்கின்றோம்…

Read More