“அம்பாரை விவசாயிகளின் பசளை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அமைச்சர் துமிந்த உறுதி!!!
-ஊடகப்பிரிவு- அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பசளை தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி, அந்தப் பிரதேச விவசாயிகளுக்கு போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். விவசாயத்துக்கு தேவையான போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் துமிந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அம்பாரை மாவட்ட விவசாயிகளின் கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா பசளையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால், அந்தப் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை…
