Headlines

தலைமன்னார் பியர் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை. அமைச்சர் ரிஷாட் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு தக்க பலன்..

தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக, அந்த மக்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்க  காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், சமாதான சூழ்நிலையில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்களுக்கான காணி உரிமங்களை வழங்குமாறு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த தொடர்ச்சியான எழுத்துமூல கோரிக்கைகள், சந்திப்புக்கள்…

Read More

முன்னாள் செயலாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு விசாரணை பெப்ரவரி 08 ஆம் திகதி..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ்.சுபைர்தீன், கட்சியின் செயலாளராக தொடர்ந்தும் இயங்குவதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விடுத்திருந்த அறிவிப்புக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி விசாரணைக்காக மீண்டும் எடுத்துக்கொள்வதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை (04/ 12/ 2017) அறிவித்தது. மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ்.சுபைர்தீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கட்டாணையையும் (Enjoining),…

Read More

ஒட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு!

ஒட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் இல்லத்தில் நேற்று (03) இடம்பெற்றது. பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள்  தொடர்பில் இதன்போது  கலந்தாலோசிக்கப்பட்டது. பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.      

Read More

புத்தளம் முல்லை ஸ்கீம் கிராம பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!

புத்தளம் முல்லை ஸ்கீம் கிராம பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும், கலை நிகழ்ச்சியும் இன்று (03) மாலை இடம்பெற்றது.  இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்று விழாவை சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார். பாலர் பாடசாலை ஆசிரியர்களான அனீஸ் ஜெரீஸா (மௌலவியா) மற்றும் மசூத் மஸாஹிமா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின்  புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள்…

Read More