Headlines

“தவறான புரிதலால் மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பிழையான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்” மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தாம் அங்கு செல்லவில்லையெனவும், அந்தப் பிரதேசத்தில் பெண்கள் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகவே பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் டாக்டர். ஹஸ்மியா தெரிவித்தார். மினுவாங்கொடையில் இடம்பெற்ற மகளிர் ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேசிய இணைப்பாளராக நான் பணியாற்றுவதால், நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை…

Read More

” நீ ” எனும் ரிஷாட்!

“நீ” எனும் ரிஷாட்!!! அணுகுண்டுகளும் ஆகாய விமானங்களும் வெடித்துச் சிதரினாலும் எனது ஆத்மா அல்லாஹ்விடம் அழகாய்ப் போய்ச் சேரும்” என்று கூறிவிட்டு மறைந்த மாபெரும் தலைவன் அஷ்ரபின் சங்க நாதமாகிய போராளிகளே புறப்படுங்கள். மர நிழல்களில்  ஓய்வெடுக்க உங்களுக்கு நேரமில்லை.   கடமையைச் செய்ய சமுதாயம் அழைக்கின்றது என்ற வீர முழக்கத்தின் வீர நடையாக விரைந்து செயல்படுபவன் நீ!  பேசினால் பூங்காற்று, வீசினால் புயல் காற்று நீ. உழைப்பு உனது தாரக மந்திரம்.  உழைப்பே உன் போதி மரம்….

Read More

குருணாகல் மாவட்ட சிறுகைத்தொழில் ஆலை ஆசிரியைகளுக்கு நிரந்தர நியமனம்  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கருத்திட்டத்துக்கமைய, யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், குருணாகல் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகைத்தொழில் ஆலைகளின் (Mini Garment) பயிற்சி ஆசிரியைகளுக்கான நியமனக்கடிதம், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகரும், அஇமகா வின் குருணாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீனினால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது. குருணாகல் மாவட்ட அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளர்…

Read More

மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை…

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான  வர்த்தமானியை நடைமுறைப்படுத்த எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தடைவிதிக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை (22) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கூறி ஆறு வாக்களர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேவேளை, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி…

Read More