Headlines

காலி வன்முறைகளைக் கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட ரிஷாட்

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை (17/ 11/2017) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனதையடுத்து மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு  விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும், தடைகளையும் பொருட்படுத்தாது, தனது பாதுகாப்பையும் கருத்திற்கெடுக்காது அதிகாலை 1.15 மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தார். வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்த…

Read More

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை!!!

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் களத்தில் மன்னாரில் இருந்து கொழும்பு திரும்பிய அமைச்சர் காலிக்கு விரைகிறார் கட்டுங்கடங்காத நிலைமையில் போய்க்கொண்டிருக்கும் காலி ஜிந்தோட்டை வன்முறைகளை உடன் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சற்று நேரத்துக்கு முன்னர் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் இராணுவம் மற்றும் அதிரடிப்படைகளை களத்தில் இறக்கியுள்ளார். ஏற்கனவே காலி மாவட்டத்தைச்…

Read More

காலி ஜிந்தோட்டை அடாவடித்தனத்தை கட்டுப்படுத்துங்கள் பொலிஸ்மா அதிபர், அமைச்சர் வஜிரவிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை

காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும்  வன்முறைச்சம்பவங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கைவிடுத்தார். வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் பொலிஸ்மா அதிபரிடம் அவர் வேண்டுகோள்விடுத்தார். இதே வேளை காலியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து…

Read More

“பிரதேச, ஊர்வாதங்களால் சமூகக் கட்டுக்கோப்பு சீர்குலைகின்றது” எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரிஷாட்

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை பாழ்பட்டு ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  மன்னார், எருக்கலம்பிட்டியில் அமைச்சரின் முயற்சியினால் சவூதி அரசின் நிதியுதவியில் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கும் 50 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை (17/ 11/ 2017) இடம்பெற்ற போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். எருக்கலம்பிட்டி EPIO நிறுவனம் ஏற்பாடு…

Read More