வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில்
கல்குடாவில் அமைக்கப்படும் எதனோல் தொழிற்சாலையில் பிரதேச வாசிகளுக்கே தொழில் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட புத்தி ஜீவிகள் சிலர் தெரிவித்திருந்தனர். ஆனால் அங்கு கடமையாற்றுவதற்கு இந்தியாவில் இருந்து ஊழியர் வந்திருப்பது கவலைக்குரிய விடயம் என கிராமிய பொருளாதார அலுவல் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு…
