வடக்கில் வாழ்ந்தவர்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை
நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான இந்த செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார். வட மாகாணத்தில் முன்னர் வாழ்ந்து யுத்த நெருக்கடிகளாலும், யத்தப்பீதியினாலும் வெளியேறிய, வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அகதி மக்கள் இந்த செயலணிக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி மீண்டும்…
