Headlines

வடக்கில் வாழ்ந்தவர்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை

நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான இந்த செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார். வட மாகாணத்தில் முன்னர் வாழ்ந்து யுத்த நெருக்கடிகளாலும், யத்தப்பீதியினாலும் வெளியேறிய, வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அகதி மக்கள் இந்த செயலணிக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி மீண்டும்…

Read More

மேல் மாகாணசபையில் 20வது திருத்தச்சட்டம். முஹம்மட் பாயிஸ்(மா.உ)

அன்று 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் பெரும்பாலான அதிகாரங்களைகளை கொடுத்துவிட்டு இன்று மீண்டும் எஞ்சியுள்ள மாகாண சபையின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு தாரைவார்த்து கொடுத்து மாகாணசபைகளின் தரங்களை மாநகரசபை அல்லது பிரதேசசபையின் தரத்திற்கு தரந்தாழ்த்த எடுக்கும் இந்த 20வது திருத்த சட்ட மூலத்தை நாங்கள் ஆதரிக்க போவதில்லை என மேல் மாகாணசபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ்  மேல்மாகாண சபையில் நடைபெற்ற 20வது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதின் போது மிகத்தெழிவாகவும் ஆடித்தனமாகவும் எடுத்துரைத்தார். அது மாத்திரமன்றி நாங்கள்…

Read More

அரசியல்சொல்வாக்கு இருப்பதாக கூறி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த இடமளியோம். நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கெடுக்காது பிரதேச மக்களின் நலனையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டே தகைமை பெற்றவர்களுக்கே புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் உரையாற்றினார். இந்த  நிகழ்வில் கனிய மணல்…

Read More