Headlines

அமைச்சர் றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் பகிர்ந்தளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் ஏற்பாட்டில் இன்று காலை இப்பேரீச்சம்பழங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரமும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களுக்கு பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் தெரிவிக்கப்பட்டது தற்போது புனித நோன்பு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், முகத்துவாரம் கிம்புலாஎல பகுதியிலுள்ளமேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் அலுவலகத்தில் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.  

Read More

சாய்ந்தமருது அல்- மாஸின் இப்தார் நிகழ்வு: பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி

அல்- மாஸ் விளையாட்டுக் கழகத்தின் நான்காவது ஆண்டைச் சிறப்பிக்குமுகமாக கழகத்தின் ஏற்பாட்டில் NS foundation இன் அனுசரணையில் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் MSS. அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், சாய்ந்தமருது பல நோக்குக் கூட்டறவுச் சங்கத்தின் தலைவர், NS Foundation அமைப்பின் தலைவர், அல்- மாஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், கழக வீரர்கள், இளைஞர் கழக…

Read More