Headlines

இலண்டன் வாழ் இலங்கையர்களை அமைச்சர் ரிஷாட் சந்திக்கின்றார்.

இலண்டனில் வாழும் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இலண்டன் இலங்கை முஸ்லிம் கலாச்சார மத்திய நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஹரோவிலுள்ள இலங்கைப்பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு இலண்டம் நேரப்படி இரவு 7.45 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் அரசியல் சூழ்நிலை, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் அரசியலைமைப்பு, தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் அமைச்சர் இந்த சந்திப்பில் எடுத்துரைப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.

Read More

10 இலட்சம் பெறுமதியான பழுதான அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் வசமாக மாட்டினார்.

ஊடாகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் கொழும்பு 12இல் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையத்தில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பாவனைக்குதவாத கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவலொன்றின் அடிப்படையில் அந்த வியாபார நிலையத்தை சுற்றி வளைத்த விசாரணை அதிகாரிகள் பாவனைக்குதவாத 25 கிலோ கிராம் கொண்ட 313 சாக்குகளைக் கைப்பற்றிருந்தனர். குறித்த தொகையான அரிசி 10 கிலோ…

Read More

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!!!

ஊடகப்பிரிவு பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று (10.03.2017) இலண்டனில் ஆரம்பமாகின்றது. பொதுநலவாய புத்தாக்க மற்றும் முதலீட்டு கவுன்ஸில் பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கின்றது. அத்துடன் நாடுகளுக்கிடையிலான உத்தியோகப்பற்றற்ற தொடர்புகளைப் பயன்படுத்தி எந்தெந்த நாடுகளுக்கு அந்தத் தொடர்புகள் மூலம் உதவிகளை நல்க முடியும் என்பதை இந்த…

Read More

சட்டவிரோதமான தீப்பட்டி தொழிற்சாலை மூடி சீல் வைப்பு. நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

அமைச்சரின் ஊடகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தரச்சான்றிதழ் அனுமதி பெறாது நிட்டம்புவ, பணாவலவில் சட்டத்துக்கு முரணாக இயங்கி வந்த தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றை திடீர் சுற்றிவளைப்பு செய்த  நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் அதனை மூடி சீல் வைத்துள்ளனர். இன்று காலை (9) தகவலொன்றின் அடிப்படையில் அந்தத் தொழிற்சாலையை முற்றுகை செய்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தரச்சான்றிதழ் அனுமதி பெறாது நடாத்தப்பட்டு வந்த அந்தத்…

Read More

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு!!!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு தேவையான புனரமைப்பு வேலைகளுக்கு உதவியளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவுக்கல்லூரியில் சந்தித்து முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்கள் குறித்து விபரித்தனர். குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளை மேற்கொள்வதில் தாங்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். பள்ளிவாசலின் திருத்த வேலைகள் இருப்பதாகவும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கென சில வசதிகளை செய்து…

Read More

ஆலையடி வேம்பில் மினி ஆடைத்தொழிற்சாலை அமைப்பதற்கு அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை!!!

ஊடகப்பிரிவு அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேசத்தில் ஒரு மினி ஆடைத்  தொழிற்சாலை அமைப்பதற்கும் அந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார முயற்சிகளை மேம்படுத்துவதற்குமென சுமார் 50 பேருக்கு சுயதொழில் வாய்ப்புக்களுக்கான உதவிகளை நல்குவதற்கும் தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஆலையடி வேம்பு பிரதேசத்தில் படித்துவிட்டு தொழில்வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கிக்கிடக்கும் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எதிர்வரும் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் உறுதியளித்தார். ஆலையடி வேம்புப் பிரதேசத்திலுள்ள பெண்களும், யுவதிகளும் அகில…

Read More

கடற்தொழிலாளர்களுக்கு மீன் மற்றும் நண்டு வலைகள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் வழங்கிவைப்பு!!!

இன்றைய தினம் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கான மீன் மற்றும் நண்டு வலைகளை பிரமான அடிப்படையிலான நன்கொடையாக தனது பன்முகப்படுத்தப்பட்ட  நிதியிலிருந்து  வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  உயர்பீட உறுப்பினருமான  றிப்கான் பதியுதீன் அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்து மீனவர்களிடம் கையளித்தார் சவேரியார்புரம், மாளிகைப்பிட்டி , பேசலை , தலைமன்னார்  பியர் ,தாழ்வுபாடு , வங்காலை  போன்ற கிராமங்களில் உள்ள பல மீனவர்களுக்கு இந்த நன்கொடை…

Read More

பாவனையாளர் அதிகாரசபையினால் 75 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைப்பு

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று (6)  75 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்பை நடாத்தினர். இந்த சுற்றிவளைப்பின் போது 21 வர்த்தக நிலையங்களில் அரிசியை அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் அகப்பட்டனர்.  மார்ச் மாதத்தில் இற்றைவரையில் 238 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 156 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். அரிசியை எழுந்தமானமாக அதிகரித்து விற்றதை அடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை…

Read More

கிழக்கில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் வெற்றியே வடக்கிலும், தெற்கிலும் அவர்களை தலை நிமிர்ந்து வாழவைக்கும் – மட்டுவில் அமைச்சர் ரிஷாட்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் எமக்குக் கிடைக்கும் வெற்றிதான் வடக்கில் மண்ணுக்காக போராடும் முஸ்லிம் மக்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைவதுடன் தென்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை விடயங்களும் வெற்றிபெறும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தலைவரும்  அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு  அண்மையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்….

Read More

கனரக வாகன பயிற்சி நெறி முடிந்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி!!!

கனரக வாகன பயிற்சி நெறி முடிந்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 06.03.2017 ஆம் திகதி  அலுத்வலையில் இடம்பெற்றது இலங்கை தொழிற்பயிற்சி அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கனகர வாகன பயிற்சி பாடசாலை அலுத்வலையில்  அமைந்துள்ள பயிற்சி நிலையத்தின்  பணிப்பாளர் விதானங்க தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.  மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சிங்கள  தமிழ், முஸ்லிம்  இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்று…

Read More

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர்!!!

மக்கள் விடுதலை முன்னனி கட்சியின் காரியாலயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்  அநுரகுமார திஸாநாயக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன், தவிசாளர்  அமீர் அலி, பாராளுமன்ற  உறுப்பினர் நவவி, செயலாளர் நாயகம் சுபைதீன்,  சட்டத்தரணி சஹீட், முன்னாள் பிரதி அமைச்சர் ஹூஸைன் பைலா, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் , கலாநிதி மரைக்கார்  ஆகியோர் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Read More

பொலன்னறுவை நெற்களஞ்சியங்களிலுள்ள நெல்லில் 30 ஆயிரம் மெடரிக் தொன் நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பொலன்னறுவை நெற்களஞ்சியங்களிலுள்ள நெல்லில் 30 ஆயிரம் மெடரிக் தொன் நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக நெற் சந்தைப்படுத்தும் சபையின் வசமுள்ள அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நெற் களஞ்சியங்கள் உள்ளன. இவற்றிலுள்ள நெல் அரிசியாக மாற்றுவதற்காக 197ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 31 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் நெல் ஆலை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…

Read More