Headlines

சதொசயின் புதிய கிளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கொஹுவலையில் திறந்து வைக்கப்பட்டது.

சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில்  50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை( 28/03/2017) கொஹுவலையில் சதொச நிறுவனம்  திறந்து வைக்கப்பட்டது. கைதொழில் வர்த்தக அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, பாரளுமன்ற உறுப்பினர் மரைக்கார் உட்பட சதொச உயர் அதிகாரிகள்  மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்

Read More

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு இரத்துச்செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை.

ஊடகப்பிரிவு வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் கஷ்டங்களின் மத்தியிலே தமது பூர்வீகக்காணிகளில் குடியேறியிருக்கும் முசலிப் பிரதேச மக்களுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தலால் அவர்களது சுயாதீனமான இயல்பு…

Read More

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுங்கள், ஜனாதிபதியிடம் முசலி மக்கள் கடிதம் மூலம் கோரிக்கை. தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவும் முடிவு

சுஐப் எம் காசிம் வில்பத்து வன சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசதங்களை உள்வாங்கி பாதுகாப்பட்ட வனம் என அந்தப் பிரதேசத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதனால் முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சுமார் 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய  வேண்டுமென முசலிப் பிரதேசத்த்ன் பல்வேறு அமைப்புக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அவசரக்கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி பரிபாலனசபைகள், விவசாய அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர்…

Read More

சதொசவின் மற்றுமொரு பரிமாணம்,

அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி, பிரதமர் இன்று கொஹுவலையில் திறந்து வைப்பு நாடளாவிய ரீதியில் 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நாளை கொஹுவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றுதலுடன் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைக்கேற்ப இவ்வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுகின்றது. 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கின்றமை…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் பகீரத முயற்சிக்கு வெற்றி கிட்டுமா? மாகாண அமைச்சு வழிவிடுமா?

சுஐப் எம் காசிம் கிண்ணியாவில் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள டெங்கு நோயின் உக்கிரத்தை அடுத்து கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்க வேண்டுமென்ற கோரிக்கை அந்தப் பிரதேச மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. கிண்ணியா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான போதிய வசதி இன்மை இல்லாததாலேயே டெங்கு மரணங்கள் சம்பவித்ததாகவும் டெங்குவின் தீவிரத் தாக்கம் அதிகரித்ததாகவும் அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சுனாமியின் பிறகு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கிண்ணியா வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை,வைத்தியர், தாதிமார் பற்றாக்குறை ஆய்வுக்…

Read More

கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான இரண்டு குளிர்வூட்டப்பட்ட கொள்கலங்களை வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வின் போது.

அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமாகிய அல்ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் முயற்சியால்  கிண்ணியா  ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான  இரண்டு குளிர்வூட்டப்பட்ட கொள்கலங்களை வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் அவர்களிடம்  உத்தியோக பூர்வமாக  இன்று 22.03.2017 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்   உள்ளூராட்சி மாகாண சபை  அமைச்சர் கௌரவ பைசல்  முஸ்தபா ,மற்றும்   கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி…

Read More

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்கும் நோக்கில் இன்றைய கலந்துறையாடளின் போது..

இன்று 22.03.2017 ஆம் திகதி   கிண்ணியா பிரதேசத்தில்  ஏற்பட்டுள்ள  டெங்கு அபாயம் தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன்  அழைப்பின் பேரில்  உள்ளூராட்சி மாகாண கௌரவ  அமைச்சர் பைஷர் முஸ்தபா கிண்ணியா விஜயம் இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள்   பிரதி அமைச்சர் அமீர் அலி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர், கௌரவ உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்…

Read More

கிண்ணியாவுக்கு நிரந்தரமான தரமான வைத்தியசாலையை நிர்மாணித்துத் தர உரிய நடவடிக்கை கிண்ணியா உயர் மட்டக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

-சுஐப் எம் காசிம் கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை தெரிவித்தார். கிண்ணியா பொது நூலகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டத்தில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்….

Read More

புத்தளம்,இஸ்மாயில்புரம் பகுதிகளுக்கான நீர் விநியோக திட்டங்களை துரிதப்படுத்துக அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நவவி பணிப்பு..

நேற்று (2017-03-17) புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயளகத்தில் புத்தளம் நீர் விநியோக மைய அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள், பிரதேச செயலாளர் ஆகியோருடனான முக்கிய சந்திப்பொன்றை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் நடாத்திருந்தார். புத்தளம் நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளுக்கு சுமார் 5000 கன அடி நீர் தேவைப்படுகின்றது. சுமார் 2000 பேர் நீர் தேவைக்காக பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கலா…

Read More

புத்தள வைத்தியாசாலையின் குறைபாடுகளை தீர்க்க அமைச்சர் றிஷாட் துரித முயற்சி

புத்தளம் வைத்தியசாலை தொடர்பாக பல கருத்துக்களும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களினதும் , பிரதி தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவி அவர்களினதும் , புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் அல்ஹாஜ் அலிசப்ரி அவர்களினதும் முயற்சியின் பயனாக புத்தளம் வைத்தியசாலையை துரிதமாக அபிவிருத்தி செய்யும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ்…

Read More

60 ஆண்டுகளின் பின் றிப்கான் பதியுதீன் வழிகாட்டலில் நெல் அறுவடை விழா

மன்னார் பெரியமடு கிழக்கு  கிராமத்தில் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ” நெல் அறுவடை விழா ” நிகழ்வு அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றலுடன் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 60 ஆண்டுகளின் பின்னர்   நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும்…

Read More

நியூ ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழக காரியாலயத் திறப்பு விழா மற்றும் இணையத்தள ஆரம்ப நிகழ்வில்பிரதம அதிதியாகபிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

நியூ ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழக காரியாலயத் திறப்பு விழா மற்றும் இணையத்தள ஆரம்ப நிகழ்வு 19.03.2017 கழக தலைவர் நெளபல் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். பிரதி அமைச்சர் உரையாற்றும் போது எமது பாடசாலையின் நூற்றாண்டு விழாவில் அனைவரும் கலந்து இவ்விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்விற்க்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்வரும் 29.04.2017 ஆம் திகதி கலந்து கொள்ளவுள்ளார் என்றும்…

Read More