Headlines

வில்பத்துக்கு வடக்கே மேலுமொரு சரணாலயத்துக்கு முஸ்தீபு முசலிப் பிரதேச மக்கள் குற்றச்சாட்டு

சுஐப் எம் காசிம் வில்பத்துக்கு வடக்கே மேலுமொரு வனவிலங்கு சரணாலயமொன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவருவதாக முசலிப்பிரதேசத்தைச்  சேர்ந்த  மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக் காணிகளையம் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமாக்கப்பட்டதுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாது அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கான திரைமறைவில் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்டோர்இந்த தகவலை வனபரிபால திணைக்கள அதிகாரிகள் தங்களிடம் இன்று வெளிப்படுத்தியதகவும் கவலையடைந்தனர். புதிய  வர்த்தமானி…

Read More

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கிண்ணியா தோப்பூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி மஹ்ரூப் எம் பி ஆகியோர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.

Read More

நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை

அமைச்சின் ஊடகப்பிரிவு அனுராதபுர நாச்சியாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதன் மூலம் இன ஐக்கியத்துக்கு பாதமாக  அமையுமென தெரிவித்துள்ள அமைச்சர், அதுவும் அங்குள்ள பழைமை வாய்நத பள்ளிவாயல் ஒன்றின் அருகில் இவ்வாறான முயற்சியொன்றை…

Read More

தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கு நீர் இறைக்கும் பம்பி வழங்கிவைப்பு

வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்  தேசமானிய   றிப்கான் பதியுதீன் அவர்களின்  வாழ்வாதார கொடுப்பனவாக  வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கான வாட்டர் பம்ப் மற்றும் விவசாயத்திற்கு தேவையான சில பொருட்களையும் வழங்கி வைத்தார் வவுனியா மாவட்ட இணைப்பாளரான பாரி அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது மேலும் நிகழ்வில் உரையாற்றிய…

Read More

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களினால் இறைவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது . மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று 27.03.2017 ஆம் திகதி  மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க   இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற  உறுப்பினர் ஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மாவட்ட டெங்கு நெளம்பு பரவுவதை தடுப்பது தொடர்பாக பிரதேச சபை செயலாளர்கள் இதற்கு பாரிய பங்களிப்புக்களை…

Read More

இனம் மதம் பார்த்து சேவை செய்வதற்கு நாங்கள் இனவாதிகள் அல்ல ( றிப்கான் பதியுதீன் )

நேற்றையதினம் மன்னார் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட அளக்கட்டு கிராமத்தில் மீள் குடியேறிய  மக்களுடனான சந்திப்பு  நிகழ்வு ஒன்று இடம்பெற்றது  இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது முன்னாள் முசலி பிரதேச சபை வேட்பாளர் ரிபாயி தலைமையில்…

Read More