மூதூர் பிரதேசத்துக்கு அமைச்சர் றிஷாட் விஜயம் தீவிர டெங்கு பரவலைத் தடுக்க அவசர நடவடிக்கை
அமைச்சின் ஊடகப்பிரிவு மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் டெங்கு நோயைத் தடுப்பதற்கும் டெங்கு முகாமைத்துவத்துத்தை மேற்கொள்வதற்கும் அவசர நிதியுதவியாக 5 மில்லியன் ரூபாவை, அகில இலங்கை மக்;கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளதாக கிண்ணியா நகரசபை முன்னாள் தவிசாளர் டொக்டர் ஹில்மி தெரிவித்தார். நேற்று மாலை(2017.03.16) மூதூர் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளர்களை பார்வையிட்டார். மூதூர் தள வைத்ததியசாலை மருத்துவ அத்தியகட்சகர் டாக்டர்…
