Headlines

பொதுநலவாய வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!!!

ஊடகப்பிரிவு பொதுநலவாய நாடுகளின் சர்வதேச வர்த்தக முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழக்குமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலண்டனில் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் அங்குரார்ப்பண மாநாடு லான்செஸ்டர் ஹவுஸில் ஆரம்பமான போது ஆரம்பமான போது இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்ற கைத்தொழிம் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட்டுடன் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இந்த மாநாட்டில் இணைந்துகொண்டார். பொதுநலவாய நாடுகளின்…

Read More

இலண்டன் வாழ் இலங்கையர்களை அமைச்சர் ரிஷாட் சந்திக்கின்றார்.

இலண்டனில் வாழும் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இலண்டன் இலங்கை முஸ்லிம் கலாச்சார மத்திய நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஹரோவிலுள்ள இலங்கைப்பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு இலண்டம் நேரப்படி இரவு 7.45 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் அரசியல் சூழ்நிலை, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் அரசியலைமைப்பு, தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் அமைச்சர் இந்த சந்திப்பில் எடுத்துரைப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.

Read More

10 இலட்சம் பெறுமதியான பழுதான அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் வசமாக மாட்டினார்.

ஊடாகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் கொழும்பு 12இல் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையத்தில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பாவனைக்குதவாத கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவலொன்றின் அடிப்படையில் அந்த வியாபார நிலையத்தை சுற்றி வளைத்த விசாரணை அதிகாரிகள் பாவனைக்குதவாத 25 கிலோ கிராம் கொண்ட 313 சாக்குகளைக் கைப்பற்றிருந்தனர். குறித்த தொகையான அரிசி 10 கிலோ…

Read More

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!!!

ஊடகப்பிரிவு பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று (10.03.2017) இலண்டனில் ஆரம்பமாகின்றது. பொதுநலவாய புத்தாக்க மற்றும் முதலீட்டு கவுன்ஸில் பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கின்றது. அத்துடன் நாடுகளுக்கிடையிலான உத்தியோகப்பற்றற்ற தொடர்புகளைப் பயன்படுத்தி எந்தெந்த நாடுகளுக்கு அந்தத் தொடர்புகள் மூலம் உதவிகளை நல்க முடியும் என்பதை இந்த…

Read More